மேனாள் சட்டமன்ற உறுப்பினர் துரைசாமி (தி.மு.க.), தி.மு.க. அய்.டி.விங் பொறுப்பாளர் தர்மலிங்கம் ஆகியோர் தமிழர் தலைவரை பயனாடை அணிவித்து வரவேற்றனர். நியூ கிருஷ்ணா உரிமையாளர் தனசேகர் தமிழர் தலைவரைச் சந்தித்து இனிப்புகள் வழங்கினார். குறிஞ்சிப்பாடி எம்.ஆர்.ஜவுளி மாளிகை உரிமையாளர் ஜோதி தமிழர் தலைவரைச் சந்தித்து கைத்தறி லுங்கிகளை வழங்கினார்.

நெய்வேலி வருகை தந்த தமிழர் தலைவருக்கு நெய்வேலி ஆர்ச் அருகே முனைவர் துரை.சந்திரசேகரன், நெய்வேலி தண்டபாணி மற்றும் தோழர்கள் உற்சாகமாக வரவேற்றனர். சேத்தியாதோப்பு வருகை தந்த தமிழர் தலைவருக்கு முனைவர் பூ.சி.இளங்கோவன், சித்தார்த்தன், பெரியார்தாசன், செல்வரத்தினம் மற்றும் தோழர்கள் எழுச்சிமிகு வரவேற்பளித்தனர்.

தமிழர் தலைவரை ஏராளமான மகளிர் மற்றும் பொது மக்கள் அன்போடு வரவேற்றனர்.

