பெரியார் – மணியம்மை மேல்நிலைப் பள்ளியின் மேனாள் தலைமை ஆசிரியர் பி. ஜெயந்தி மறைந்தாரே!

1 Min Read

அரசியல்

திருச்சியில் பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் நடைபெறும் பெரியார் மணியம்மை (அரசு உதவி பெறும்) மேல் நிலைப் பள்ளியில் ஆசிரியையாக வும், தலைமை ஆசிரியை யாகவும் மிகத் திறம்படப் பணியாற்றி, ஓய்வு பெற்று திருச்சியிலேயே தங்கி விட்ட திருமதி பி. ஜெயந்தி  (வயது 78) அவர்கள் நேற்று (5.4.2023) உடல் நலக் குறைவால் காலமானார் என்பதை அறிய மிகவும் துயரம் அடைகிறோம்.

பணியில் இருந்தபோதும், பணி ஒய்வு பெற்ற பிறகும்கூட மிகவும் பாசத்துடனும், மரியாதை  – அன்புடனும் பழகிப் பணியாற்றிய எடுத்துக்காட்டான தலைமை ஆசிரியையாவார் அவர். 

சிறந்த பண்பாளர். அவரது சொந்த ஊரான பழனிக்கு அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அவரை இழந்துவாடும் பெரியார் கல்விக் குடும்பத்திற்கும், அவரது குருதிக் குடும்பத்தினருக்கும் நமது ஆறுதலையும், மறைந்த கல்வியாளருக்கு நமது இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

 

                                                                                                                                              கி.வீரமணி

சென்னைதலைவர், 

6.4.2023பெரியார் கல்விக் குடும்பம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *