காரைக்கால், ஏப். 7 தமிழ்நாடு, காரைக்கால் மீனவர்கள் 12 பேர் மீது இலங்கை கடற்படையினர் 5.4.2023 அன்று அதிகாலை தாக்குதல் நடத்தி, விரட்டியடித்தனர்.
காரைக்கால் மாவட்டம், கினிஞ்சல்மேட்டை சேர்ந்த செல்லதுரை என்பவரது விசைப்படகில், அதே பகுதியைச் சேர்ந்த இவாஸ் (25), கோவேந்தன் (43), கிருஷ்ணமூர்த்தி (38), மனோ (33), அஜித் (27), நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த சிவகுரு (40), கோவிந்தன் (36), மெஜின் (19), ஆறுமுகம் (42), ராஜ் (36), கார்த்தி (36), கலியமூர்த்தி (29) ஆகிய 12 பேர் காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த ஏப்.1-ஆம் தேதி மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
நாகை மாவட்டம், கோடியக்கரைக்கு தென்கிழக்கு பகுதியில் 5.4.2023 அன்று அதிகாலை 1.30 மணியனளில் இவர்கன் மீன்பிடித் துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அங்கு வந்த இலங்கை கடற்படையினர், படகில் ஏறி மீனவர்களைத் தாக்கியுன்னனர். இதில் 5 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
மேலும், படகிலிருந்த மீன்கள், வலை உள்ளிட்டவற்றை எடுத்துக் கொண்டு மீனவர்களை விரட்டியடித் துள்ளனர். காயமடைந்த மீனவர்கள் கிளிஞ்சல்மேடு கிராமப் பஞ்சாயத் தார்களை தொடர்புகொண்டு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் படகு காரைக்கால் மீன்பிடித் துறைமுகம் வந்தது. படகு உரிமையாளர் மற்றும் பஞ்சாயத்தார்கள், குடும்பத்தினர் காய மடைந்த மீனவர்களை காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்தனர். பின்னர் மீனவர்கள் வீடு திரும்பினர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மீனவர்கள் கூறியது: இந்திய கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டி ருந்தபோது, இலங்கை கடற்படையினர் துப்பாக்கியுடன் படகில் ஏறி அனைவரையும் இரும்பு குழாயால் தாக்கினர். சுமார் ரூ. 5 லட்சம் மதிப் புள்ள மீன்கள், வலை, கைப்பேசிகள், அரிசி, மளிகைப் பொருள்கள், காலணி களையும் எடுத்துச் சென்றுவிட்டனர்.
சிறிது தொலைவு பயணித்து இந்திய கடலோரக் காவல்படையினரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தோம். அவர்கள் எங்களுக்கு முதலுதவி அளித்து அனுப்பிவைத்தனர் என்றனர்.