தமிழ்நாட்டில் தேர்தல் களம் சூடுபிடிக்கிறது! தேர்தலில் ‘ஏஅய்’ முறைகேடுகளுக்கு கடிவாளம் தலைமைத் தேர்தல் அதிகாரி எச்சரிக்கை!

2 Min Read

சென்னை, மார்ச் 21- தமிழ்நாட்டில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், சமூக வலைதளங்களில் பரப்பப்படும் போலிச் செய்திகள் மற்றும் தொழில்நுட்ப முறைகேடுகளைத் தடுக்க தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கடுமையான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளார்.

தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புதிய விதிகளின்படி, வாக்காளர்களை திசைதிருப்பும் வகையில் செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

அடையாளத் திருட்டிற்குத் தடை: ஒருவரின் அனுமதியின்றி அவரது குரல், தோற்றம் அல்லது அடையாளத்தை ஏஅய் மூலம் தவறாகச் சித்தரிக்கும் பதிவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

வெளிப்படைத்தன்மை: ஏஅய் மூலம் உருவாக்கப்பட்ட அல்லது டிஜிட்டல் முறையில் மாற்றப்பட்ட காட்சிப் பதிவுகளில், அது ‘செயற்கை உள்ளடக்கம்’ (Synthetic Content) என்கிற லேபிளைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.

3 மணி நேர கெடு: அரசியல் கட்சிகளின் பக்கங்களில் சட்டவிரோத காட்சிப் பதிவுகள் கண்டறியப்பட்டால் அல்லது புகாரளிக்கப்பட்டால், அடுத்த 3 மணி நேரத்திற்குள் அவை நீக்கப்பட வேண்டும்.

முன் அனுமதி: சமூக ஊடகங்களில் அரசியல் விளம்பரங்களை வெளியிட, ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழுவிடம் (எம்சிஎம்சி) 3 நாட்களுக்கு முன்பே அனுமதி பெற வேண்டியது கட்டாயம். நகர்ப்புற வாக்காளர்களின் வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்கும் நோக்கில், தேர்தல் ஆணையம் ஒரு முன்னோடி முயற்சியை எடுத்துள்ளது:

அடுக்குமாடி குடியிருப்புகளில் ஓட்டுச் சாவடிகள்

தமிழ்நாட்டில் முதன்முறையாக 14 உயரமான அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வீட்டுவசதி சங்க வளாகங்களுக்குள்ளேயே ஓட்டுச்சாவடிகள் அமைக்கப் பட்டுள்ளன.

இடங்கள்: சென்னையில் 5, திருவள்ளூரில் 4, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டில் தலா 2, மதுரையில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இந்த வசதி செய்யப்பட்டுள்ளது. 3. தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களை உற்சாகப்படுத்தும் வகையில் நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கான ஆண்டு ஊதியம் 6,000 ரூபாயி லிருந்து 12,000 ரூபாயாக இரட்டிப்பாக்கப் பட்டுள்ளது.

கூடுதலாக, எஸ்அய்ஆர் பணிக்கு 2,000 ரூபாய் சிறப்பு ஊக்கத்தொகையும் அறிவிக்கப் பட்டுள்ளது. இதற்காகத் தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 99.8 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *