ஏழை மருத்துவப் பயனாளிகளுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு எங்கே? டில்லி அரசுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி தாக்கீது

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி, மார்ச் 20- டில்லியில் உள்ள புகழ்பெற்ற கல்லீரல் மற்றும் பித்தப்பை அறிவியல் மய்யத்தில் (ILBS), பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினருக்கு (EWS) உரிய சிகிச்சை சலுகைகள் வழங்கப்படுவதில்லை என தொடரப்பட்ட வழக்கில், டில்லி அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ‘சமூக நீதி’ என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:
அரசு நிதியுதவி பெறும் ILBS மருத்துவமனையில், உள் மருத்துவப் பயனாளிகளுக்கான படுக்கைகளில் 10 சதவீதத்தை ஏழைகளுக்கு ஒதுக்க வேண்டும். புற மருத்துவப் பயனாளிகளில் (OPD) 25 சதவீதத்தினருக்கு கட்டணமின்றி சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.
இந்த விதிகளைப் பின்பற்றாமல், நகரின் மிக அதிகக் கட்டணம் வசூலிக்கும் மய்யமாக ILBS மாறி வருகிறது. இது அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளுக்கு (பிரிவு 14 மற்றும் 21) எதிரானது.
“ஏழைகளுக்குக் குறைந்த கட்டணத்தில் முறையான சிகிச்சை கிடைப்பது அவர்களின் அடிப்படை உரிமை. அது ILBS-இல் மறுக்கப்படுகிறது.” – மனுதாரர் தரப்பு.
தலைமை நீதிபதி டி.கே. உபாத்யாயா மற்றும் நீதிபதி தேஜஸ் காரியா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இந்த மனு 18.3.2026 அன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்குரைஞர் சத்யகம் ஆஜராகி வாதிட்டார். இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் கேட்டு டில்லி அரசு மற்றும் ILBS நிர்வாகத்திற்கு தாக்கீது அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஏப்ரல் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *