உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

  1. 2004 ஆம் ஆண்டின் விளக்கக் கடிதத்தைப் பயன்படுத்தி, பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் வங்கிகளில் பணிபுரியும் பெற்றோரின் சம்பளத்தையும் வருமான வரம்பிற்குள் கணக்கிட்ட ஒன்றிய அரசின் அணுகுமுறை தவறானது.
  2. 1993 ஆம் ஆண்டின் கொள்கைப்படி, சமூகத்தில், பெற்றோரின் முன்னேறிய நிலையைத் தீர்மானிக்க அவர்களின் பதவி மற்றும் பணி நிலையைத்தான் (Status) முதன்மையாகப் பார்க்க வேண்டும். வருமானம் என்பது ஒரு கூடுதல் காரணி மட்டுமே!
  3. அரசு வெளியிடும் ஒரு சாதாரண விளக்கக் குறிப்பு (Clarificatory Instructions), அரசின் அடிப்படையான இட ஒதுக்கீட்டுக் கொள்கையையோ அல்லது விதிகளையோ மாற்றிவிட முடியாது.
  4. பெற்றோரின் பதவியைக் கருத்தில் கொள்ளாமல், இயந்திரத்தனமாகச் சம்பளத்தை மட்டும் வைத்து கிரீமிலேயரைத் தீர்மானிப்பது சட்டப்படி செல்லாது.
  5. OBC கிரீமிலேயர் விதிகளை அரசு வழிகாட்டுதல்களின்படி சரியாகப் பயன்படுத்த வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் தகுதியுள்ளவர்களுக்கு ‘கிரீமிலேயர்’ அல்லாதோர் என்ற தகுதி மறுக்கப்படக் கூடாது.
  6. பெற்றோரின் வருமானம் எதன்மூலம் வருகிறது, அவர்களின் பணி நிலை என்ன என்பதைச் சரியாக மதிப்பீடு செய்ய வேண்டும். வருமான அளவுகோலைத் தவறாகப் புரிந்துகொண்டு இடஒதுக்கீட்டை மறுக்கக் கூடாது.
  7. ஒரு போட்டியாளர் உண்மையில், ‘கிரீமிலேயர் அல்லாத’ (‘Non-Creamy Layer’) பிரிவைச் சேர்ந்தவர் என்றால், அவருக்கு உரிய பணி ஒதுக்கீட்டையும், பலன்களையும் அரசு வழங்க வேண்டும்.
  8. ஏற்கெனவே நிரப்பப்பட்ட பணியிடங்களுக்குப் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, தகுதியுள்ள இந்தப் போட்டியாளர்களுக்காகத் தேவைப்பட்டால் கூடுதல் (Supernumerary) பணியிடங்களை அரசு உருவாக்கலாம்.
  9. ஒன்றிய அரசு தாக்கல் செய்த அனைத்து மேல்முறையீட்டு மனுக்களையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உயர் நீதிமன்றங்கள் (சென்னை, டில்லி, கேரளா) மற்றும் தீர்ப்பாயமும் வழங்கிய சாதகமான தீர்ப்புகளை உறுதி செய்தது.
  10. ஆறு மாத காலத்திற்குள் இந்தப் போட்டியாளர்களின் கோரிக்கைகளை மறுபரிசீலனை செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க, ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *