தூரிகை முனையில் துளிர்விட்ட வெற்றி! ஓவியப் போட்டியில் திருச்சி பெரியார் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் அபார சாதனை!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

திருச்சி, மார்ச் 11- அரவிந்த் போலீஸ் அகாடமி மற்றும் மக்மாஸ் டிரஸ்ட் இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான மாபெரும் ஓவியப் போட்டியில், திருச்சி பெரியார் நூற் றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தங்களது அபாரத் திறமையை வெளிப்படுத்தி பல்வேறு பரிசுகளைக் குவித்து சாதனை படைத்துள்ளனர்.

கடந்த மார்ச் 1-ஆம் தேதி திருச்சி விஸ்டம் வெல்த் இன்டர்நேஷனல் பள்ளியில் நடைபெற்ற இந்தப் போட்டியில், நகரின் முன்னணிப் பள்ளிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

கடும் போட்டிக்கு இடையே, பெரியார் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் வர்ணங்களால் காகிதத்தில் ஜாலங்கள் செய்து நடுவர்களின் பாராட்டைப் பெற்றனர்.

வெற்றி வாகை சூடியவர்கள்

இப்போட்டியில் பல்வேறு பிரிவுகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களின் விவரம்:

மாணவி எம்.சிவசிறீ வைரம்: மினி சப்-ஜூனியர் பிரிவில் பங்கேற்று முதலிடம் பிடித்து அசத்தினார்.

மாணவி,வி.எம். அஃப்ரா பாத்திமா சப்-ஜூனியர் பிரிவில் மிகச்சிறந்த ஓவியத்தைத் தீட்டி முதலிடம் வென்றார்.

மாணவர் எம். வருண் வைரம் சப்-ஜூனியர் பிரிவில் தனது திறமையால் இரண்டாமிடம்  பெற்றார்.

மாணவி எஸ்.ஜீவமித்ரா சப்-ஜூனியர் பிரிவில் நுணுக்கமான ஓவியத்தைப் படைத்து இரண்டாமிடம் வென்றார்.

சாதனை படைத்த மாண வர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்களும், கேடயங்களும் வழங்கப்பட்டன. பள்ளிக்குப் பெருமை சேர்த்த இந்த வருங்கால ஓவியர்களைப் பள்ளித் தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள், பணித் தோழர்கள் மற்றும் பெற்றோர்கள் வெகுவாகப் பாராட்டி மகிழ்ந்தனர். மாணவர்களின் இந்த வெற்றி மற்ற மாணவர்களுக்கும் ஒரு சிறந்த ஊக்கமாக அமைந்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *