வாசிங்டன், மார்ச் 10– உலக சந்தையில் எண்ணெய் தட்டுப்பாட்டைக் குறைப்பதற்காக ரஷ்ய கச்சா எண்ணெய் மீதான தடைகளை நீக்குவதாகவும், 30 நாள்களுக்கு மட்டும் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அனுமதி அளித்துள்ளதாகவும் அமெரிக்க அரசு அறிவித்தது.
இந்த நிலையில், கடலிலுள்ள கப்பல்களில் சிக்கியுள்ள ரஷ்ய கச்சா எண்ணெய்யை இந்தியா வாங்குவதற்கு அனுமதி அளித்துள்ளதாக, அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசண்ட் கூறியுள்ளார்.
இதுபற்றி, அவர் 6.3.2026 அன்று பேசியதாவது:
“உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் சிறப்பாக விநியோகம் செய்யப்பட்டுள்ளது. கடலில் உள்ள ரஷ்யாவின் கச்சா எண்ணெய் வாங்க நமது கூட்டாளிகளான இந்தியாவை அனுமதிக்க அமெரிக்க நிதியமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியர்கள் மிகவும் நல்ல நடிகர்கள். தடை விதிக்கப்பட்ட ரஷ்ய கச்சா எண்ணெய்யை வாங்க வேண்டாம் என நாம் கூறியவுடன் அவர்கள் ஒப்புக்கொண்டனர். ரஷ்யாவுக்குப் பதிலாக அமெரிக்க கச்சா எண்ணெய்யை அவர்கள் வாங்கவுள்ளனர். ஆனால், எண்ணெய் விநியோகம் தற்காலிகமாகத் தடைப்பட்டுள்ளதால் அதைத் தீர்ப்பதற்காக ரஷ்ய எண்ணெய்யை வாங்க நாம் அனுமதி வழங்கியுள்ளோம்” எனக் கூறியுள்ளார்.
ஏற்கெனவே, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் நிர்வாகத்தைச் சேர்ந்த பல முக்கிய அதிகாரிகள் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்க அரசு அனுமதி அளித்துள்ளதாகத் தொடர்ந்து கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
