கோவை, மார்ச்3- மார்ச் 10ஆம் தேதி கோவையில் திராவிடர் கழகத் தலை வர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை ஆற்றும் அன்னை மணியம் மையார் பிறந்த நாள் விழா, பெரியார் உலகத்திற்கு நிதியளிப்பு விழா, 2026 சட்டமன்றத் தேர்தலும் வாக்காளர்கள் கடமையும் கழக பொதுக்கூட்டம் எழுச்சியுடன் நடைபெற ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
28-02-2026 காலை 10 மணி அளவில் திமுக கோவை மாநகர் மாவட்ட செயலாளராக பொறுப்பேற்றுள்ள துரை.செந்தமிழ்ச்செல்வன் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித் தனர்.
பொதுக்கூட்டத்தை சிறப்பாக நடத்திடுவோம் ஆசிரியர் கோவை வருகை நமக்கு பெருமை என மகிழ்வுடன் தெரிவித்தார்.
கழக மாநில ஒருங்கி ணைப்பாளர் இரா.ஜெயக்குமார், கோவை மாவட்டத் தலைவர் மா.சந்திரசேகர், மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் ஆ.பிரபாகரன், கோவை பீளமேடு பகுதி செயலா ளர் ரமேஷ், இரா.வெற் றிச்செல்வன், மாவட்ட இளைஞரணி செயலாளர் சா.ராசா அ.மு.ராசா, குறிச்சி முத்து.கணேஷ், போத்தனூர் இர.கணேஷ் பொன்னாப்பூர் பு.திருநா வுக்கரசு ஆகியோர் தொடர்ந்து பொதுகூட்ட ஏற்பாட்டுப் பணிகள் மற்றும் பெரியார் உலகத் திற்கு நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டு வரு கின்றனர்.
