ஹாவேரி, மார்ச் 2– கருநாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தைச் சேர்ந்த இளம் இணையருக்கு கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்புதான் கோலாகலமாகத் திருமணம் நடைபெற்று முடிந்தது.
திருமணத்திற்குப் பிந்தைய சடங்குகளின் ஒரு பகுதியாக, தங்களது புதிய காரில் குலதெய்வம் கோயிலுக்குச் சென்று சிறப்பு பூஜை செய்ய முடிவு செய்தனர். அதன்படி, கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு, காரில் மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
ஹாவேரி அருகே கார் வந்துகொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே வந்த வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்தக் கோர விபத்தில் பலத்த காயமடைந்த புதுமண இணையர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவலறிந்து வந்த காவல்துறையினர் உடல்களை மீட்டு உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
