ஒக்கேனக்கல், பிப்.28– ஒக்கேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து அளவானது 27.2.2026 அன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 3,000 கன அடியாகவும், 9 மணி நிலவரப்படி வினாடிக்கு 4,000 கன அடியாக அதிகரித்து தமிழ்நாடு, கருநாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக வந்து கொண்டிருக்கிறது.
திடீர் நீர்வரத்து அதிகரிப்பால் ஒக்கேனக்கல் பிரதான அருவி, சினி அருவி, அய்ந்தருவி, அய்வார் பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
மேலும், கருநாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் நீர்வரத்து அவ்வப்போது அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளதால் ஒக்கேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து அளவுகளை ஒன்றிய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
