பீகார்: சிவராத்திரி ஊர்வலத்தில் அட்டகாசம்; பெண்களைக் காத்த இளைஞர் – வேடிக்கை பார்த்த காவல்துறை!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

பீகார் மாநிலம் ஹாஜிப்பூரில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற ஊர்வலத்தில், போதைக் கும்பலின் அட்டூழியங்கள் அரங்கேறியது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.

சிவராத்திரி ஊர்வலத்தில் பங்கேற்ற ஒரு கும்பல், ‘சிவனின் பிரசாதம்’ என்ற பெயரில் போதைப் பொருட்களைப் பயன்படுத்திக் கொண்டு, பொதுமக்களுக்கும் போக்கு வரத்துக்கும் இடையூறு விளைவிக்கும் வகையில் காட்டுமிராண்டித்தனமாகச் செயல்பட்டுள்ளது. குறிப்பாக, அந்த வழியாகச் சென்ற பெண்களைக் குறிவைத்து இக்கும்பல் அநாகரிகமான முறையில் கேலி செய்தும், சீண்டியும் வந்துள்ளது.

காவல் துறையைக் காணவில்லை; கவசமாய் இருந்து பெண்களைக் காத்த தனி ஒருவன்

ஊர்வலம் ஒரு குறுகிய பாதையைக் கடந்தபோது, அங்கு வந்த இரண்டு இளம் பெண்கள் இந்த போதை கும்பலிடம் சிக்கிக்கொண்டனர். அவர்களைச் சூழ்ந்துகொண்ட கும்பல் அநாகரிகமாக நடந்து கொண்டதைக் கண்ட அந்த வழியாக வந்த இளைஞர் ஒருவர், உடனடியாகச் செயல்பட்டார்.

தனது இருசக்கர வாகனத்தைச் சாலையோரம் நிறுத்திவிட்டு, அந்த இரு பெண்களையும் தனது முதுகிற்குப் பின்னால் பாதுகாப்புக்காக நிற்குமாறு கூறினார்.

பெண்களுக்குப் பாதுகாப்பாக நின்ற அந்த இளைஞரை, போதையில் இருந்த கும்பல் ஆபாச வார்த்தைகளால் திட்டியும், வம்புக்கு இழுத்தும் சென்றது.

இருப்பினும், அந்த கும்பல் முழுமையாகக் கடந்து செல்லும் வரை, அந்த இளைஞர் ஒரு கவசமாக நின்று அந்தப் பெண்களைப் பாதுகாத்துள்ளார்.

கையாலாகாத நிலையில் காவல்துறை

இந்தச் சம்பவத்தின் போது மிகவும் வேதனையான விஷயம் என்னவென்றால், ஊர்வலத்திற்குப் பாதுகாப்பிற்காக வந்திருந்த காவல்துறையினர் அங்கேயேதான் இருந்தனர். ஆனால், பெண்களைச் சீண்டிய கும்பலைக் கண்டிக்கவோ அல்லது அந்த இளைஞருக்கும் இளம்பெண்களுக்கும் பாதுகாப்பு வழங்கவோ அவர்கள் முன்வரவில்லை. காவல்துறையினர் இந்த அநாகரிகச் செயல்களைக் கண்டும் காணாமல் வேடிக்கை பார்த்தபடி ஊர்வலத்தோடு சென்றது பொதுமக்களின் கடும் கோபத்திற்கு ஆளாகியுள்ளது.

பார்வையாளர் கருத்து: “பக்தி என்ற பெயரில் போதையைப் பயன்படுத்திப் பெண்களைத் துன்புறுத்துவது கண்டிக்கத்தக்கது. சட்டத்தைக் காக்க வேண்டிய காவல்துறையே வேடிக்கை பார்ப்பது சமூகப் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்குகிறது.”

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *