பிஜேபி ஆளும் மத்திய பிரதேசத்தில் காதல் திருமணம் செய்வோர் குடும்பத்தை புறக்கணிக்க வேண்டுமாம் கிராம பஞ்சாயத்து தீர்ப்பு – வலைதளங்களில் வெளியாகி பரபரப்பு

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, ஜன.27 மத்திய பிரதேசத்தில் காதல் திருமணம் செய்து கொள்பவர்களின் குடும்பத்தைப் புறக்கணிக்க வேண்டும் என ஒரு கிராம மக்கள் முடிவு எடுத்துள்ளனர்.

மத்திய பிரதேச மாநிலம் ரத்லம் மாவட்டம், பஞ்சேவா கிராமத்தில் சமீபத்தில் நடந்த ஒரு கூட்டத்தில், இளைஞர் ஒருவர் கிராமத்தின் புதிய விதிகளைப் பகிரங்கமாக வாசித்தார். இது தொடர்பான காட்சிப் பதிவு சமூக வலைதளங்களில் வெளி யாகி உள்ளது. அதில் அவர் கூறியிருப்பதாவது:

காதல் திருமணம்

“இளைஞரோ, இளம் பெண்ணோ தங்கள் விருப்பப்படி வீட்டை விட்டு வெளியேறிக் காதல் திருமணம் செய்து கொண்டால், அவர்களை மட்டும் தண்டிக்கக் கூடாது; அவர்களுடைய குடும்பத் தினரைச் சமூக ரீதியாகப் புறக் கணிக்க வேண்டும். குறிப்பாக, சமூக நிகழ்ச்சிகளுக்கு அவர்களை அழைக்கக் கூடாது. பால் மற்றும் ரேசன் பொருட்கள் வழங்கக் கூடாது. அக்குடும்பத்தினரை யாரும் வேலைக்கு அழைக்கக் கூடாது. அவர்களுடைய நிலத்தில் யாரும் வேலைக்குச் செல்லக் கூடாது.

இந்தக் கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கும், அக்குடும்பத் தினருடன் பேசுபவர்களுக்கும், அவர்களுக்கு ஆதரவு அளிப் பவர்களுக்கும் கடும் அபராதம் விதிக்கப்படும். அத்துடன் அவர்களும் ஒதுக்கி வைக்கப்படு வார்கள்,” இவ்வாறு அவர் கூறி யுள்ளார்.

வலைதளத்தில் வெளியானது

அந்த காட்சிப் பதிவில் மூன்று குடும்பத் தலைவர்களின் பெயர்கள் வெளிப்படையாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. இது அக்குடும்பத்தினரின் பாதுகாப் புக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இந்த காட்சிப்பதிவு வைரலானதைத் தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை அதிகாரிகள் அந்த கிராமத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது, “சமூகப் புறக் கணிப்பு என்பது அரசியலமைப் புச் சட்டத் திற்கு எதிரானது. இது குறித்து முறையான புகார் அளிக்கப் பட்டால், சம்பந்தப் பட்ட வர்கள் மீது கடும் நட வடிக்கை எடுக்கப்படும்” என்று அந்த கிராம மக்களை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

சட்டம் என்ன சொல்கிறது?

இந்திய அரசியல் சாசனச் சட்டப்படி, 18 வயது நிரம்பிய பெண்ணும், 21 வயது நிரம்பிய ஆணும் தங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்க முழு உரிமை உள்ளது. இது போன்ற ‘பஞ்சாயத்து’ தீர்ப்புகள் செல்லாது என்றும், காதல் இணையர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பது அரசின் கடமை என்றும் உச்ச நீதிமன்றம் பலமுறை தெளிவுபடுத்தியுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *