வேப்பிலைப்பட்டியில் கழக பிரச்சாரப் பொதுக்கூட்டம்

Viduthalai
3 Min Read

அரசியல்

அரூர், ஏப். 22- அரூர் கழக மாவட்டம் வேப்பிலைப்பட்டியில் 16-.4.2023 அன்று திராவிடர் கழக இளைஞரணி மாணவர் கழகம் சார்பில் ‘சனாதனத்தை வேரறுத்த உயிராயுதம் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர்’ என்னும் தலைப் பில் சிறப்புமிகு பொதுக்கூட்டம் நடை பெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட கழக இளை ஞரணி தலைவர் த.மு.யாழ்திலீபன் தலைமையேற்று ஒருங்கிணைத்து நடத் தினார். நிகழ்ச்சியின் துவக்கமாக தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் சிலைகளுக்கு கழகத் தோழர்கள், ஊர் பொதுமக்கள் இணைந்து முழக்கமிட்டு மாலை அணிவித்தனர். அதைத் தொடர்ந்து  நடைபெற்ற பொதுக்கூட்ட நிகழ்வுக்கு வருகை தந்த அனைவரையும் திராவிட மாணவர் கழக தோழர் பா. பெரியார் வரவேற்று பேசினார். மாவட்ட கழக செயலாளர் ச.பூபதி ராஜா, மாநில இளைஞரணி துணை செயலாளர் மா, செல்லதுரை, மாவட்ட ஆசிரியரணி செயலாளர் மு.பிரபாக ரன், ஒன்றிய கழகச் செயலாளர் வெ. தனசேகரன், ஒன்றிய கழக அமைப் பாளர் த.இளங்கோ, ஒன்றிய பகுத்தறி வாளர் கழகத் தலைவர் பெ. அன்பழகன் ஒன்றிய பகுத்தறிவாளர் கழக செய லாளர்  தாழை சொ.பாண்டியன், விடு தலைவாசகர் வட்ட தலைவர் வ.நட ராஜன், கழக மகளிர் அணி தலைவர் த.முருகம்மாள், இளைஞரணி தோழர் கள் பெ. அய்யனார், மாணவர் கழக தோழர் ம.திருவள்ளுவன், ஆ.பிரதாப், ச.சாய்குமார் ஆகியோர் முன்னிலை ஏற்றனர்.

தருமபுரி மண்டல திராவிடர் கழக மாணவர் கழகச் செயலாளர் இ. சமரசம் தொடக்க உரையாற்றினார்.  வேப் பிலைப்பட்டி கிராமம் என்பது சுயமரி யாதை இயக்க தொடக்க காலமுதல் பல தலைமுறைகளாக இன்றும் திரா விடர் கழக கிராமமாக செயல்பட்டு வருகிறது அந்த வகையில் அந்த கிரா மத்தில் வாழ்ந்த சுயமரியாதை சுட ரொளிகள் பெரியார் பெருந்தொண் டர்கள் ரயில்வே துறையில் பணியாற்றிய காலத்திலும் இயக்கக் கொள்கையை ஏற்று கருப்பு சட்டை அணிந்து கள மாடியவர்களாக இருந்த அ.தீத்தான், ஏ.மாரி, பெ.கண்ணன், பி.ஆர். ராம் குமார் ஆகியோருடைய  படங்களை மண்டல கழகத் தலைவர் அ.தமிழ்ச் செல்வன் திறந்து வைத்து புகழ் உரை நிகழ்த்தினார். 

இறுதியாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சொற்பொழிவாளர் சு.பெ.தமிழமுதன் கலந்துகொண்டு இந்து சனாதனத்தை வேரறுத்த உயிராயுதம் புரட்சியாளர் டாக்டர் அண்ணல் அம் பேத்கர் என்னும் தலைப்பில் சிறப்புரை யாற்றினார். 

சிறப்புரையில், அம்பேத்கரை கொண்டாடுகிற நாம் கொள்கை லட்சியம் கோட்பாடுகளோடு கொண் டாட வேண்டும். கருத்தியலாக பார்க்க வேண்டும், அறிவுப்பூர்வமாக சிந்திக்க வேண்டும், அவரை பரப்ப வேண்டும், அதை விடுத்து அம்பேத்கர் பிறந்த நாளில்   பூஜை செய்வது, மாவு எடுப்பது, பால் அபிஷேகம் செய்வது, என்று கொள்கைக்கு மாறான செயலை செய்து வருவதை முதலில் கொண்டாடுபவர்கள் யாராக இருந்தாலும் நிறுத்திக் கொள்ள வேண்டும். அப்படித்தான் அம்பேத் கருக்கு விழா கொண்டாடுவோம் என் றால் கொண்டாடாமலேயே இருந்து விடலாம் என்று பேசினார். 

இந்நிகழ்ச்சியில் ஊர் தலைவர் கணேசன் முன்னாள் ஊர் தலைவர் தனபால் அமுல்செல்வம் சத்திரபதி சுடரொளி அறிவொளி தமிழழகன் செல்வம் புஷ்பராஜ் அழகிரி சம்பத் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். வருகை தந்த சிறப்பு அழைப்பாளர்களுக்கு தந்தை பெரியாரின் நூல்கள் பரிசாக வழங் கப்பட்டது. 

நடனம் மற்றும் நாடகங்க ளில், பேச்சுப் போட்டிகளில் பங்கு பெற்று கலைத்துறையில் தன்னை ஈடு படுத்திக் கொண்ட பத்தாம் வகுப்பு மாணவி துவாரகாவை பாராட்டி தந்தை பெரி யாரின் புத்தகங்களை பரிசளித்தனர். இறுதியாக திராவிட மாணவர் கழக பொறுப்பாளர் கு.அரிகரன் நன்றி கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *