கனடாவிடமிருந்து பிரிந்து தனி நாடாகிறதா ஆல்பர்ட்டா? மக்கள் நீண்ட வரிசையில் நின்று கையெழுத்திடுவதால் பரபரப்பு!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

ஒட்டாவா, ஜன. 19- கனடாவின் முக்கிய மாகாணங்களில் ஒன்றான ஆல்பர்ட்டா, அந்நாட்டிலிருந்து பிரிந்து தனி நாடாக வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது. இது தொடர்பான புகார் மனுவில் கையெழுத்திட மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

இயற்கை வளங்கள் மற்றும் கனிம வளங்கள் செழித்துக் காணப்படும் ஆல்பர்ட்டா மாகாணம், கனடாவின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரிய அளவில் பங்களிப்பை வழங்கி வருகிறது. இருப்பினும்  தங்கள் மாகாணத்தின் வருவாயில் பெரும் பகுதியை கனடா அரசு எடுத்துக்கொள்கிறது. பதிலுக்கு ஒன்றிய அரசு ஆல்பர்ட்டாவின் வளர்ச்சிக்கு போதிய முக்கியத்துவம் அளிப்பதில்லை.  நாடாளுமன்றத்தில் தங்களின் குரல் மற்றும் கருத்துகளுக்கு மதிப்பளிக்கப்படுவதில்லை.

இத்தகைய காரணங்களால், தங்களை தாங்களே நிர்வகித்துக் கொள்ளும் ‘தனி நாடு’ தகுதி வேண்டும் என அந்த மாகாண மக்கள் கருதுகின்றனர். ‘ஆல்பர்ட்டா செழிப்புத் திட்டம்’ (Alberta Prosperity Project) என்ற அமைப்பின் தலைவர் மிச் சில்வெஸ்டர், இதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார். அரசின் தேர்தல் ஆணையத்திடம் உரிய அனுமதி பெற்று, கனடாவிலிருந்து ஆல்பர்ட்டா பிரிவது தொடர்பான அதிகாரப்பூர்வ புகார் மனுவை அவர் உருவாக்கியுள்ளார்.

இந்த மனு குறித்து விவாதிக்கப்படும் கூட்டங்களிலும், கையெழுத்திடும் நிகழ்வுகளிலும் திரளான மக்கள் பங்கேற்று வருகின்றனர். மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் ஆதரவை பதிவு செய்யும் காட்சிகள் கனடா அரசியலில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளன.

இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, அடுத்த நான்கு மாதங்களுக்குள் சுமார் 178,000 கையெழுத்துக்களை அந்தப் புகார் மனுவில் சேகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை எட்டும் பட்சத்தில், மாகாணத்தின் அரசியல் மற்றும் நிர்வாக ரீதியான அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *