கழகத் தோழர்கள் இரங்கல்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

காங்கிரஸ் மேனாள் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்களின் இணையர் ஏ.வத்சலா உடலுக்கு, சிதம்பரம் மாவட்டக் கழக சார்பில், மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட கழகத் தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன், மாவட்ட செயலாளர் கோவி.பெரியார்தாசன், புவனகிரி ஒன்றிய தலைவர் என்.ஏ.இராமலிங்கம் ஆகியோர் மரியாதை செலுத்தினர். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தொலைபேசி மூலம் இரங்கல் தெரிவித்து ஆறுதல் கூறினார். பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் நேரில் மரியாதை செலுத்தினார்.

 

2.1.20266 அன்று தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினரும், தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமாகிய வழக்குரைஞர் ஆ.மணிக்கும், தருமபுரி நகர கழக செயலாளர் கிழக்கு, நாட்டாண் மாதுவுக்கும், தருமபுரி நகர திமுக செயலாளர் மேற்கு கவுதமனுக்கும், திராவிடர்  கழகத்தின் சார்பாக மாநில ஒருங்கிணைப்பாளர் ஊ.ஜெயராமன் தலைமையில் கழகத் தோழர்கள் மாவட்ட கழகத் தலைவர்  கு.சரவணன், மாவட்டச் செயலாளர் பீம தமிழ்பிரபாகரன், மாவட்டத் தொழிலாளர் அணிச் செயலாளர் மாணிக்கம், மாநில மகளிர் அணிச் செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி ஆகியோர் சந்தித்து, புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணியின் தொடர் முயற்சியினால் , திருவனந்தபுரத்தில் இருந்து சென்னைக்கும் சென்னையில் இருந்து திருவனந்தபுரத்திற்கும்  செல்கின்ற திருவனந்தபுரம் சென்னை எக்ஸ்பிரஸ், மொரப்பூர் ரயில் நிலையத்தில், நின்று செல்லும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது ..

அவரின் தொடர் முயற்சிக்கு கழகம் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது. நிகழ் ஆண்டு, பெரியார் நாட்காட்டியும், பகுத்தறிவாளர் கழக  நாட்குறிப்பும்(Diary) வழங்கப்பட்டது ..

தருமபுரியில் நடைபெற இருக்கின்ற பெரியார் உலக நிதியளிப்பு விழா குறித்தும், தமிழர் தலைவர் வருகை குறித்தும், மிகுந்த வரவேற்புகளோடும், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி திராவிட முன்னேற்ற கழக நகரக் கழக செயலாளர்களும் கேட்டு அறிந்தனர். கூட்ட நிகழ்ச்சிக்கு உரிய ஏற்பாடுகளை செய்வதாகவும் உற்சாகத்தோடு உறுதி அளித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *