கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள்

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* நமது தமிழ்நாட்டின் பெருமையை வெளிக் காட்டும் கீழடி, பொருநை காட்சியகங்களைக் காணுங்கள். மொழி உரிமைக்காக உயிர்த் தியாகம் செய்த இயக்கம் திமுக என்றும், இது ஒரு கட்சியின் அரசு அல்ல; இனத்தின் அரசு என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* டில்லி அலுவலகத்தில் நேரில் ஆஜரான விஜய்யிடம் சிபிஅய் 7 மணி நேரம் விசாரணை: கரூர் சம்பவம் குறித்து 150 கிடுக்கிப்பிடி கேள்விகள். பொங்கல் விழா முடிந்த பிறகு, விஜய்யிடம் மீண்டும் விசாரணை நடத்த சிபிஅய் முடிவு !

* அமலாக்கத்துறைக்கு எதிரான மம்தாவின் போர்; பாஜகவை எதிர்த்து எதிர்க்கட்சிகள் எப்படி போராட வேண்டும் என்பதை நிரூபித்து உள்ளது பாராட்டத்தக்கது என்கிறார் கட்டுரையாளர் ஷிகா முகர்ஜி.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* வங்காளத்தில் உள்ள எஸ்அய்ஆர் செயல்முறைக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் டெரிக் ஓ’பிரையன் மற்றும் டோலா சென் ஆகியோரின் மனுக்களுக்கு பதிலளிக்க தேர்தல் ஆணையத்திடம் இந்தியத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதி ஜோய்மால்யா பக்ஜி ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு கோரியுள்ளது.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* ‘மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம்’ பெயர் மாற்றம் உள்ளிட்ட மோடி அரசின் புதிய மசோதாகள் திரும்பப் பெறப்படாவிட்டால் பிரதமர் மோடி கடுமையான எதிர்ப்பை எதிர் கொள்வார்: மல்லிகார்ஜுன கார்கே எச்சரிக்கை.

தி இந்து:

* கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் திருவனந்தபுரத்தில் சத்தியாகிரக போராட்டம். கேரளாவுக்கு பொருளாதார ரீதியாக ஒன்றிய அரசு நெருக்கடி கொடுக்கிறது: முதலமைச்சர் பினராயி விஜயன் பேச்சு.

* மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா தலைமைத் தேர்தல் ஆணையருக்கு கடிதம்: சிறப்புத் தீவிரத் திருத்தச் செயல்முறை என்பது பகுத்தறிவுடன் சிந்தித்துச் செயல்படுவதற்கு பதிலாக, இயந்திரத்தனமாகவும், தொழில்நுட்பக் காரணங்களாலும் இயக்கப்படுகிறது என சிறப்புத் தீவிரத் திருத்தச் செயல்முறையில் உள்ள குறைபாடுகளை கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

தி டெலிகிராப்:

* உ.பி. ஷாஜஹான்பூரில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலாட்டா செய்த சங்கிகள்: பல் மருத்துவரான டாக்டர் அட்னான் அன்சாரி, ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரியும் 35 வயதான நீலம் என்பவரை சென்ற ஆண்டு செப்டம்பரில் திருமணம் செய்துகொண்டார். தற்போது தங்கள் ஊரில் ஏற்பாடு செய்யப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் ‘ஹிந்துத்வா சங்கிகள்’ உள்ளே நுழைந்து கலாட்டா. நிகழ்ச்சி ரத்து.

 – குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *