தமிழர் தலைவர் இரங்கல்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

பெரியார் பெருந்தொண்டர் மறைந்த திருவாரூர் தாஸ் – லீனா ஆகியோரின் மகனாகிய ஜெ.இன்ப ராஜா நேற்று (11.1.2026) அதிகாலை 4 மணியளவில் மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம். செய்தியை அறிந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அவரது மூத்த சகோதரி தா.வெண்ணிலாவிடம் தொலைப்பேசியில் ஆறுதல் கூறினார். மறைந்த ஜெ.இன்பராஜின் இறுதி நிகழ்வு நேற்று மாலை 5 மணியளவில் நடைபெற்றது. தொடர்புக்கு – 96260 33593.

– – – – –

மறைவு

தமிழ்நாடு அரசின் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் அவர்களின் மாமியாரும், திருப்பூர் கிழக்கு மாவட்ட தி.மு.கழக வழக்கறிஞரணி அமைப்பாளர் தாராபுரம் வழக்குரைஞர் க.செல்வராஜ் அவர்களின் தாயாருமான மறைந்த ஆசிரியர் டி.எஸ்.கந்தசாமி அவர்களின் மனைவியுமான க.பாலாமணி அவர்கள் இன்று (12.1.2026) காலை 6.30 மணியளவில் மறைவுற்றார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். மறைந்த தகவல் அறிந்ததும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தொலைபேசி வாயிலாக அமைச்சர் என்.கயல்விழி மற்றும் அவரது இணையர் க.செல்வராஜ் ஆகியோரிடம் ஆறுதல் தெரிவித்தார்.

– – – – –

மறைவு

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மேனாள் தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்களின் இணையர் வத்சலா (வயது 62) உடல் நலக்குறைவு காரணமாக நேற்று (11.1.2026) காலமானார் என்பதை அறிந்து, திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தேனியிலிருந்து , கே.எஸ்.அழகிரியுடன் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்தார்.

– – – – –

மறைவு

சமூக ஆர்வலர் திண்டுக்கல் அரிமா சங்க உறுப்பினர் காஜா மைதீன் நேற்று (11.01.2026) மறைவுற்றார். தகவல் அறிந்த கழகத் தலைவர் திண்டுக்கல் பேகம்பூர் நத்தர்ஷா தெருவில் உள்ள அன்னாரின் இல்லத்திற்கு இன்று காலை சென்று, அவருக்கு இறுதி மரியாதை செலுத்தினார். உடன் திண்டுக்கல் மாவட்டப் பொறுப்பாளர்கள் இருந்தனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *