கும்பமேளாவில் கங்கையில் நீராட இந்துக்களைத் தவிர பிறருக்குத் தடை

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

அரித்துவார், ஜன. 7- கும்பமேளா நாட்களில், அரித்வாரில் கங்கை நதியில் நீராட 105 படித்துறைகளில் இந்துக்கள் அல்லாதோருக்குத் தடை விதிப்பது குறித்து உத்தரகாண்ட் அரசு பரிசீலித்து வருகிறது. ஹரித்வாரின் முக்கிய ‘ஹர்-கி-பவுரி’ படித்துறை பராமரிப்பைக் கண்காணித்து வரும் ‘கங்கா சபை’ மற்றும் சில துறவிகளின் கோரிக்கையைத் தொடர்ந்து, அதனை உத்தரகாண்ட் அரசு ஆலோசித்து வருகிறது.

இந்நிலையில், ‘கும்ப மேளா’ நாட்களில் 105 படித்துறைகளிலும் இந்து அல்லாதோருக்குத் தடை விதிக்க வேண்டும் என்ற கங்கா சபையின் கோரிக்கைக்கு, அரித்வாரில் வசிக்கும் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

“இவ்வாறு தடை செய்வது சாத்தியமும் அல்ல, விரும்பத்தக்கதும் அல்ல” என்று வழக்குரைஞர் சுதான்ஷு திவேதி கூறினார். நீர்மின் துறையின் மேனாள் நிர்வாகப் பொறியாளர் ராகேஷ் சந்திரா கூறுகையில், “நமது மதத்தின் தாராளவாத பிம்பத்தை இந்தப் பாகுபாடு கடுமையாகப் பாதிக்கும்” என்றார்.

இதுதவிர, ரிஷிகேஷ் மற்றும் அரித்வார் ஆகிய நகரங்களை ‘ஸநாதன புனித நகரங்கள்’ என்று அறிவிக்கவும் மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

சோனியா காந்திக்கு உடல்நலக்குறைவு

டில்லி மருத்துவமனையில் அனுமதி!

இந்தியா

புதுடில்லி, ஜன. 7- டில்லி அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சோனியா காந்தி (79), திடீர் உடல்நலக்குறைவு காரணமாக டில்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில நாட்களாக சோனியா காந்தி தீராத இருமல் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. டில்லியில் தற்போது நிலவி வரும் கடுமையான காற்று மாசு காரணமாக, அவருக்கு சுவாசக் கோளாறு மற்றும் இருமல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக, 5.1.2026 அன்று மாலை அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

தற்போது அவர் நெஞ்சகப் பிரிவு மருத்துவ நிபுணர்களின் (Chest Specialists) தீவிர கண்காணிப்பில் உள்ளார். எனினும், அவரது உடல்நிலை தற்போது சீராக (Stable) இருப்பதாகவும், பயப்படும்படியாக ஏதுமில்லை என்றும் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே சோனியா காந்தி பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளைச் சந்தித்து வருகிறார்:

கடந்த டிசம்பர் மாதம் தான் அவர் தனது 79ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவரது உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *