காரைக்காலை அடுத்துள்ளது திரு நள்ளாறு கோயில். சனி தோஷத்தை கழிக்க இங்கே பக்தர்கள் வருவதுண்டு. இந்த கோயிலைப் பற்றி விதவிதமாக வண்ண வண்ணமாக கயிறு திரித்து தல புராணங்களை எழுதி வைத்துள்ளனர். ஏழரை நாட்டு சனி பிடித்து விட்டது. அதனால் பெரும் கஷ்டங்கள் வந்து சேரும். இந்த சனீஸ்வரன் கோயிலுக்கு வந்து சடங்குகள் செய்து தட்சிணைகளை அள்ளிக் கொடுத்து குளத்தில் மூழ்கினால் தோஷம் போகும் என்பது கொழுப்பெடுத்த மூடநம்பிக்கை. ஆனால் என்ன நடந்தது? அந்த சனீஸ்வர பகவான் கோயிலில் பணியாற்றும் அர்ச்சகர் ரோகிணி (வயது 60) என்பவரது வீட்டிலேயே ரூபாய் ஒன்பதரை லட்சம் நகை, ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் கொள்ளை போயிற்று. அந்தோ பரிதாபம் அன்றாடம் சனீஸ்வர பகவானுக்கு பூஜை செய்யும் அர்ச்சகருக்கே சனி பகவான் சக்தி வேலை செய்ய வில்லையே! சனி பகவான் தன் திருமுகத்தை அர்ச்சகர் பக்கம் காட்டவில்லை – இதுதான் பக்தியா? பக்தர்கள் சிந்திப்பார்களாக!
சனீஸ்வர பகவான் சக்தி இதுதானோ சனீஸ்வரர் கோயில் அர்ச்சகர் வீட்டிலேயே திருட்டு
1 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books