சென்னை,ஏப்.26- சூரிய மின் சக்தி, காற்றாலை என புதுப்பிக்கத் தக்க எரி சக்தி மூலமாக, 2022-23ஆம் நிதி யாண்டில் 2.22 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்து சாதனை படைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலமாக, ரூ.12.02 கோடி பணம் சேமிக்கப்பட்டுள்ளது. கார்பன் வெளியேற்றத்தை பூஜ்ஜியமாக்கும் வகையில், புதுப் பிக்கத்தக்க எரிசக்தி (சூரிய ஒளி மற்றும் காற்றாலை) உற்பத்தியில் சென்னை அய்சிஎஃப் கவனம் செலுத்தி வருகிறது. அய்சிஎஃப் தொழிற்சாலை பகுதி, குடியிருப்பு பகுதி உட்பட பல்வேறு இடங்களில் காற்றாலைகள், சூரிய மின்சக்தி தகடுகள்நிறுவப்பட்டுள்ளன. இதன் மூல மாக, மின்சார உற்பத்தி ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. கணிசமாக பணம் மிச்சமாகி வருகிறது.
அய்சிஎஃப்-இல் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலமாக, கடந்த 2013-14இல் காற்றாலை, 1.63 மில்லியன் யூனிட் உற் பத்தி செய்யப்பட்டது. அப்போது, ரூ.7 கோடி பணம் சேமிக்கப்பட்டது. இதன் பிறகு, காற்றாலை, சூரிய மின்சக்தி சாத னங்கள் நிறுவுதல் அதிகரிக்கப்பட்டது. இதனால், சூரிய மின் உற்பத்தி படிப்படி யாக அதிகரித்து, 2022-23ஆம் நிதியாண் டில் 2.22 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்து சாதனை படைக்கப் பட்டுள்ளது. இதன்மூலம், அய்சிஎஃப்-இல் ரூ.12.02 கோடி சேமிக்கப்பட் டுள்ளது. இதுதவிர, கார்பன் வெளியேற் றம் குறைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அய்சிஎஃப் அதிகாரி கள் கூறியதாவது: காற்றாலை, சூரிய மின்சக்தி நிலையங்கள் நிறுவி, மின்சா ரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதுத விர, அய்சிஎஃப் தொழிற் சாலைகளில் இருந்து எந்த ஒரு கழிவுப்பொருளும் வெளியேறாமல் அவற்றை உள்ளேயே சுத்திகரித்து, மறுசுழற்சி செய்ய அனைத்து முறைகளும் நிறுவப்பட்டுள்ளன.
சமீபத்தில், அய்சிஎஃப் பொது மேலாளர் அலுவலகம், தகவல் தொழில் நுட்ப அலுவலகம், வடிவமைப்பு மேம் பாட்டு அலுவலகம், பர்னிஷிங் அலு வலகம், உயர் வெல்டிங் தொழில்நுட்ப பயிலகம் ஆகியவை உள்ளிட்ட 21,934 சதுர மீட்டர் கொண்ட அய்சிஎஃப் வளாகத்தை நிகர நேர் மின்சக்திப் பகுதிகளாக அங்கீக ரித்து, இந்திய மின் சக்தி அமைப் பான பிஇஇ தர நிர்ணயம் செய்து சான்றிதழ் வழங்கியுள்ளது. அதாவது, இந்த கட்டடங்களுக்கு தேவையான மின்சாரத்தைவிட கூடு தல் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட் டுள்ளது.
-இவ்வாறு அவர்கள் கூறினர்.