அய்தராபாத்தில் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியில் ரூ.7 கோடி இழந்த தொழில் அதிபர்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

அய்தராபாத், ஜன.6 அய்தரா பாத்தில் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியில் தொழிலதிபர் ஒருவர் ரூ.7 கோடியை இழந்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

டிஜிட்டல் அரெஸ்ட்

தெலங்கானா தலைநகர் அய்தராபாத்தை சேர்ந்த 81 வயது தொழிலதிபரை, கடந்த 27-ஆம் தேதி மர்ம நபர் வாட்ஸ் அப் அழைப்பில் தொடர்பு கொண்டார். தன்னை மும்பை காவல்துறையினர் மூத்த அதிகாரி என்று அறிமுகம் செய்த அந்த நபர், தொழிலதிபரை மிரட்டும் தொனியில் பேசினார். தொழிலதிபர் பெயருக்கு தாய்லாந்தில் இருந்து மும்பைக்கு பார்சல் வந்திருப்பதாகவும் அந்த பார்சலில் போதைப் பொருட்கள் இருப்பதாகவும் அந்த நபர் குற்றம் சாட்டினார். இதற்காக அவரை ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ செய்திருப்பதாகவும், வீட்டை விட்டு வெளியேறக் கூடாது என்றும் மிரட்டினார்.

ரூ.7.12 கோடி இழப்பு

கடந்த 28-ஆம் தேதி மற்றொரு மர்ம நபர் பேசினார். மும்பை காவல் துறையினர் மூத்த அதிகாரி என்று கூறிய அந்த நபர், “பார்சலில் வந்த போதைப் பொருளுக்கும் தீவிரவாத குழுக்களுக்கும் தொடர்பு இருக்கிறது” என்று குற்றம் சாட்டினார். இந்த வழக்கில் இருந்து விடுவிக்க தொழிலதிபரின் பெயரில் இருந்த மியூச்சுவல் பண்ட், வங்கிகளில் நிரந்தர வைப்பு தொகையைப் பணமாக மாற்ற மர்ம நபர் உத்தரவிட்டார். அதன்படி ரூ.7.12 கோடியை மர்ம நபர் கூறிய வங்கிக் கணக்குகளுக்கு தொழிலதிபர் அனுப்பி வைத்தார். கடந்த 29-ஆம் தேதி தொழிலதிபரை மீண்டும் தொடர்பு கொண்ட மர்ம நபர், மேலும் ரூ.1.2 கோடியை தருமாறு மிரட்டல் விடுத்தார். இதனிடையே தொழிலதிபரின் நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த உறவினர்கள் விசாரணை நடத்திய போது உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. இதுகுறித்த புகாரின் அடிப்படையில் அய்தராபாத் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *