அமெரிக்கரை திருமணம் செய்தாலும் கிரீன் கார்டு கிடைக்காது டிரம்ப் நிர்வாகம் புதிய கட்டுப்பாடு

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

வாஷிங்டன், ஜன. 3- அமெரிக்காவுக்கு பல்வேறு நாடுகளில் இருந்து பலர் படிப்பு, வேலை, தொழில் ஆகியவற்றுக்காக பல்வேறு விசாக்களில் செல்கிறார்கள். இவர்களில் ஏராளமானோர் அமெரிக்க குடியுரிமை பெற கிரீன் கார்டுக்கு விண்ணப்பிக்கிறார்கள்.

இந்த கிரீன் கார்டு ஒரு வெளிநாட்டவர் அமெரிக்காவில் நிரந்தர மாக வாழவும், வேலை செய்யவும் சட்டப்பூர்வ உரிமையை வழங்குகிறது.இதில் அமெரிக்கக் குடியுரிமை பெற்ற பெண் அல்லது ஆணை திருமணம் செய்து கொள்பவர்களுக்கு எளிதாக கிரீன் கார்டு கிடைக்கும். அவர்களுக்கு முன்னுரிமையும் அளிக்கப்படும். ஆனால் முறைகேடாக கிரீன் கார்டு பெற பலர் திருமணம் செய்து கொள்வதாகப் புகார்கள் எழுந்தன.

இந்த நிலையில் குடி யேற்றம் தொடர்பாக பல்வேறு கட்டுபாடுகளை விதித்து வரும் அதிபர் டிரம்ப் நிர்வாகம் தற் போது கிரீன் கார்டுக்கு புதிய கட்டுப்பாட்டை விதித்து உள்ளது.அதன்படி அமெரிக்கக் குடிமகனைத் திருமணம் செய்து கொள்வது மட்டுமே கிரீன் கார்டுக்கு உத்தரவாதம் அளிக்காது என்று அமெரிக்க குடிவரவுத் துறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அதிகாரிகள் கூறியதாவது:-

டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் தற்போது திருமண அடிப்படையிலான கிரீன் கார்டு விண்ணப்பங்கள் தீவிர ஆய்வுக்கு உட்படுத் தப்படுகின்றன . குடியுரிமை பெறுவதற்காக மட்டுமே திருமணம் நடந்ததா? அல்லது அவர்கள் உண்மையி லேயே திருமணம் செய்து ‘கொண்டார்களா? என்பதை அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்வார்கள்.

கணவன் -மனைவி இருவரும் ஒரே வீட்டில் வசிக்கவில்லை என்றால், அவர்களின் கிரீன் கார்டு விண்ணப்பத்துக்கு சிக்கல் ஏற்படும். ஒன்றாக வாழ்வதுதான் உங்களுக்கு கிரீன் கார்டைப் பெற்றுத் தரும். பலர் வேலை, படிப்பு, வசதி ஆகியவற்றுக்காக வெவ்வேறு இடங்களில் இருப்பதாக கூறும் காரணங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது. நீங்கள் ஒரே வீட்டில் வசிக்கவில்லை என்றால் அந்த திருமணத்தை பற்றி கேள்வி அதிகாரிகள் கேட்பார்கள். உங்க ளுக்குத் திருமண அடிப் படையிலான கிரீன் கார்டு வேண்டுமென்றால், நீங்கள் ஒன்றாக வாழ வேண்டும் என்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *