மாநில அரசின் திட்டங்களை தங்கள் திட்டமாக கூறுகிறார் மோடி- கேரள அமைச்சர்

Viduthalai
1 Min Read

திருவனந்தபுரம், ஏப். 27- பிரதமர் மோடி கொச்சியில்  3 ஆயிரத்து 200 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார். பிரதமர் மோடி துவக்கி வைத்த திட்டங்களில் 94 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டம் மட் டுமே ஒன்றிய அரசுடையது என கேரள நிதியமைச்சர் கூறி யுள்ளார். இந்தநிலையில் கேரள நிதியமைச்சர் பால கோபால் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள காட்சிப் பதிவில், பிரதமர் மோடி துவக்கி வைத்த ஒன்றிய அரசின் திட்டமான வந்தே பாரத் ரயிலுக்கு, 94 கோடி ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டுள்ளதாகவும் உரிய நிதி ஒதுக்காமல் கேரள அரசை ஒன்றிய அரசு மூச்சுத் திணற வைப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *