காஷ்மீரில் இடஒதுக்கீடு அறிக்கையை வெளியிடக்கோரி மாணவர்கள் போராட்டம் மெகபூபா முப்தி உட்பட தலைவர்களுக்கு வீட்டுக் காவல்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சிறிநகர், டிச.29 ஜம்மு காஷ்மீரில் தற்போதுள்ள இட ஒதுக்கீடு கொள்கையை மாற்றியமைக்க குழு ஒன்றை முதல்வர் உமர் அப்துல்லா அமைத்தார். ஒராண்டுக்கு மேலாகியும் இந்த குழுவின் அறிக்கை வெளியாகவில்லை.

மாணவர்கள் போராட்டம்

இதனால் அறிக்கையை வெளியிடக்கோரி காஷ்மீர் மாணவர்கள் நேற்று போராட்டம் நடத்த முடிவு செய்தனர். இவர்களுக்கு மெகபூபா முப்தி, தேசிய மாநாட்டு கட்சி எம்.பி. சையத் ருஹல்லா மெஹ்தி, பிடிபி தலைவர் வகீத் பாரா, நகர் முன்னாள் மேயர் ஜுனைத் மாத்து ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர். இவர்கள் மாணவர்கள் போராட்டத்தில் கலந்து கொள்வதை தடுக்க, நேற்று வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.

இது குறித்து வகீத் பாரா கூறுகையில், ‘‘இடஒதுக்கீட்டு பிரச்சினைக்கு தீர்வு காணும் எண்ணம் உமர் அப்துல்லா அரசுக்கு இல்லை. இதற்காக முதலமைச்சர் உமர் அப்துல்லா வீடு முன் ஓராண்டுக்கு முன்பே போராட்டம் நடத்தினோம். இடஒதுக்கீடு அறிக்கையை பொதுவில் வெளியிட வேண்டும். உமர் அப்துல்லாவால் அமைக்கப்பட்ட அமைச்சரவை துணைக் குழுவின் அறிக்கையை நிறுத்தி வைப்பது நியாயம் அல்ல’’ என்றார்.

ருஹல்லா மெஹ்தி கூறுகையில், ‘‘எங்கள் வீட்டு முன் காவல்துறையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். மாணவர்களின் போராட்டத்தை தடுக்க, இது முன்னெச்சரிக்கை நடவடிக்கையா?” என்றார்.

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *