சென்னையில் தெருக்கள், சாலைகளை தரமாக அமைக்க புதிய விதிமுறைகள்: விரைவில் அறிமுகமாகிறது

2 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, டிச.26- சென்னையில் அனைத்துச் சாலைகளும் ஒரே மாதிரியான தரத்தில் இருக்க புதிய விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

சாலை வடிவமைப்பு

சென்னை மாநகராட்சி பகுதி முழுவதுக்கும் ஒரே மாதிரியான சாலை வடிவமைப்பு விதிமுறைகளை உருவாக்க முடியுமா? முடியும் என்கிறது சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் (கும்டா). நகரத்தின் அனைத்துத் தெருக்கள் மற்றும் சாலைகளுக்கும் ஒரே மாதிரியான வடிவமைப்பு விதிமுறைகளை வரைவு செய்துள்ளது. உடைந்த நடைபாதைகள், அடிக்கடி சாலைகளை தோண்டுவது, ஒரே மாதிரி இல்லாத நடைபாதை ஆகிய மூன்று பிரச்னைகளை சரிசெய்ய இந்த விதிமுறைகள் முக்கியமாக உதவும். இந்த வழிகாட்டுதல் 4 மாநகராட்சிகள், 12 நகராட்சிகள், 13 நகர பஞ்சாயத்துகள், 1 சிறப்பு தர பேரூராட்சிகள் மற்றும் 22 ஊராட்சி ஒன்றியங்களுக்கு பொருந்தும்.

இந்த விதிமுறைகள் சென்னை மாநகராட்சி,சென்னை மெட்ரோ ரயில், சென்னை குடிநீர் வடிகால் வாரியம், மாநில நெடுஞ்சாலை துறை, மற்ற பல துறைகள் என 15 வெவ்வேறு அமைப்புகளுக்கு பொருந்தும். இது குறித்து கும்டா உறுப்பினர் கூறியதாவது: இது 25 ஆண்டு விரிவான போக்குவரத்து திட்டத்தின் ஒரு பகுதி. குறுகிய காலத்தில், இரண்டு ஆண்டுகளுக்குள், உடனடியாக செய்யக்கூடிய சீரமைப்புகளை செய்ய விரும்புகிறோம். நடைபாதை வசதிகளில் குறைந்தபட்சம் ஓரளவு தரநிலையாக்கம் இருக்க வேண்டும்.

இதுகுறித்த முதல் வரைவு, பங்குதாரர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவர்களின் கருத்துகளின் அடிப்படையில் மாற்றங்கள் செய்யப்படும். இறுதி வடிவம் பிப்ரவரி மாதத்திற்குள் எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு இரண்டாம் பாதியில் இதை அரசாணையாக அறிவிக்க முயற்சிக்கிறோம். அதனால் இது கட்டாயமாக்கப்படும்.

விபத்து அதிகரிப்பு

350 பக்கங்கள் கொண்ட இந்த ஆவணம் கட்டுமானம் முதல் பராமரிப்பு வரை முழு திட்ட வாழ்க்கை சுழற்சியையும் உள்ளடக்கியது. முதன்மைச் சாலைகள், துணை முதன்மைச் சாலைகள், சேகரிப்புச் சாலைகள், தெருக்களில் இந்த மாற்றம் செய்யப்படவுள்ளது. அனைத்து சாலைகளிலும் ஒரு பக்கத்தில் குறைந்தது 2 மீட்டர் அகல நடைபாதை, பேருந்து நிறுத்தங்கள், வாகன நிறுத்துமிடம், குப்பை தொட்டிகள் போன்றவற்றுக்கு குறைந்தது 2.5 மீட்டர் இடம், குறைந்தது 1 மீட்டர் அகலமான மரங்கள் நடும் இடம், தேர்ந்தெடுக்கப் பட்ட பகுதிகளில் 2-3 மீட்டர் அகல சைக்கிள் பாதைகள் என பல்வேறு அம்சங்கள் திட்ட அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. போக்குவரத்து காவல்துறையும், சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையத்திடம் குழி நிறைந்த சாலைகளை முன்னுரிமை அடிப்படையில் சரிசெய்ய கேட்டுள்ளது. மோசமான சாலை நிலைமை, நெரிசல் மற்றும் விபத்துகளை அதிகரிக்கிறது.

மெட்ரோ ரயில், நெடுஞ்சாலைகள், போக்குவரத்து காவல்துறை, மழைநீர் வடிகால் துறைகள் இடையே தினசரி ஒருங்கிணைப்பு கூட்டங்கள் நடத்தப்படும். இது விரைவான சீரமைப்புக்கு உதவும். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் சென்னையில் அனைத்து சாலைகளும் ஒரே மாதிரியான தரத்தில் இருக்க புதிய விதிமுறைகள் வருகின்றன. இனி நடைபாதைகள் சீரான முறையில் அமையும். எல்லா துறைகளும் ஒரே விதியை பின்பற்றும். இவ்வாறு கும்டா உறுப்பினர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *