20 ஆண்டு காலமாக அமலில் இருந்த காந்தி வேலை திட்டத்தை ஒரே நாளில் அழித்து விட்டது மோடி அரசு

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

ராகுல் காந்தி குற்றச்சாட்டு

புதுடில்லி, டிச.20  ஆண்டு காந்தி வேலை திட்டத்தை ஒரே நாளில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு  அழித்துவிட்டது என்று ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: விபி-ஜி ராம் ஜி மசோதா என்பது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் மறுசீரமைப்போ மாற்றோ அல்ல. அந்த சட்டம் கிராமங்களுக்கு எதிரானது. இருபது ஆண்டு காலமாக அமலில் இருந்த மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தை மோடி அரசு ஒரே நாளில் அழித்துவிட்டது.

இந்த திட்டம், உரிமைகள் அடிப் படையிலான, தேவை சார்ந்த உத்தர வாதத்தை அழித்து கட்டுப்படுத்தப்படும் பங்கீட்டு திட்டமாக மாற்றப்பட்டுள்ளது. அதன் வடிவமைப்பே மாநிலங்கள் மற்றும் கிராமங்களுக்கு எதிரானது.

மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டம் கிராமப்புற தொழிலாளர்களுக்கு பேரம் பேசும் சக்தியை வழங்கியது. கிராமப்புற உள்கட்டமைப்புகள் புத்துயிர் பெற்றன. அந்த செல்வாக்கைத்தான் மோடி அரசு உடைக்க விரும்புகிறது. ஒன்றிய அரசு உருவாக்கியுள்ள புதிய விபி-ஜி ராம் ஜி மசோதா வேலைக்கு வரம்பு விதித்து, அதை மறுப்பதற்கு மேலும் பல வழிகளை உருவாக்குவதன் மூலம் கிராமப்புற ஏழைகளிடம் இருந்த ஒரே ஒரு ஆயுதத்தையும் பறித்து பலவீனப்படுத்துகிறது. இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *