இல்லாததைக் கூறி அமளியில் இறங்கிய பா.ஜ.க. காங்கிரஸ் பேரணிக்குத் திரண்ட மக்கள் ஆதரவை திசைதிருப்பும் நடவடிக்கை! காங்கிரஸ் குற்றச்சாட்டு!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி, டிச. 16- மோடிக்கு கல்லரை கட்டுவோம் என்று டில்லியில் காங்கிரஸ் நடத்திய கூட்டத்தில் முழக்கமிட்டதாக கூறிய பாஜகவினர் அமளியில் ஈடுபட்டனர். ஆனால் இதற்கான சான்றுகளை பாஜக தரப்பு தரவில்லை.

பேரணி

டில்லியில் வாக்குத்திருட்டு தொடர்பாக மாபெரும் பேரணி ஒன்றை காங்கிரஸ் கட்சி டில்லி ராம்லீலா திடலில் நடத்தியது. இந்த திடலில் பாஜகவின் வாக்குதிருட்டு பற்றி காங்கிரஸ் தலைவர்கள் பேசினார். இந்த பேரணிக்கு மக்கள் ஆதரவு அதிகம் இருந்தது.

‘இந்த நிலையில் இந்தப் பேரணியில் யாரோ மோடிக்கு கல்லரை கட்டுவோம் என்று முழங்கியதாக கூறி பாஜக நாடாளு மன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நாடாளுமன்ற இரு அவைகளிலும் பாஜகவினர் அமளியில் ஈடுபட்டதால் அவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக மாநிலங்களவையில் பேசிய ஒன்றிய அமைச்சர் ஜெ.பி. நட்டா, பிரதமர் மோடிக்கு எதிரான முழக்கங்களுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

காங்கிரஸ் பேரணியில் பிரதமர் மோடிக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டது மிகவும் வருத்தமளிக்கிறது. இதுபோன்ற முழக்கங்கள் காங்கிரஸ் கட்சியின் சிந்தனையையும் மனநிலையையும் காட்டுகிறது. ஒரு பிரதமருக்கு எதிராக இதுபோன்ற விசயங்களைக் கூறுவது கண்டிக்கத்தக்கது.

இதற்காக சோனியா காந்தி இந்த நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். மிகவும் கீழ்த்தரமான அரசியலை காங்கிரஸ் செய்து வருகிறது. இது எங்களால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை” என்று கூறினார்.

இதுபற்றி காங்கிரஸ் நாடாளு மன்ற உறுப்பினர் கே.சி.வேணு கோபால் கூறுகையில், “டில்லியில் நாங்கள் ஒரு வெற்றிகரமான பேரணியை நடத்தியதால் இன்று பாஜகவினர் உருவாக்கியுள்ள ஆதாரமற்ற நாடகம் இது.

எந்தவொரு காங்கிரஸ் தலைவராவது அப்படி ஏதாவது சொன்னாரா? என்று நான் அமைச்சர் கிரண் ரிஜிஜுவிடம் கேட்டேன்.

பேரணியில் இருந்த சிலர் அப்படிச் சொன்னதாக கூறினார். இது ஆதாரமற்றது. அரசியல் எதிரிகளாக இருந்தாலும் சரி, எந்தவொரு அரசியல் தலைவருக்கும் எதிராக ஏற்றுக்கொள்ள முடியாத முழக்கத்தைப் பயன்படுத்துவது எங்கள் வழக்கம் அல்ல.

கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசிய பேச்சை நாம் பார்த்தோம். மாநில அளவிலோ அல்லது மாவட்ட அளவிலோ எந்தத் தலைவரும் இதுபோன்ற செயலைச் செய்ய மாட்டார்கள்” என்று தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *