மாணவிகளுக்கும் மாதவிடாய் விடுமுறை கருநாடக அரசு முடிவு

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

பெங்களூரு, டிச.12  கருநாடக உயர் நீதிமன்றத்தில் மாதவிடாய் விடுமுறைக்கு எதிராக வழக்கு நடைபெற்று வரும் நிலையில், அம்மாநில அரசுப் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கும் மாதவிடாய் விடுப்பு வழங்க அரசு முடிவெடுத்துள்ளது.

மாதவிடாய் விடுமுறை

கருநாடகாவில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் 18 முதல் 52 வயது வரையிலான பெண் பணியாளர்களுக்கு மாதவிடாய் காலத்தில் மாதம் ஒருநாள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க மாநில அரசு கடந்த நவம்பர் 20-ஆம் தேதி உத்தரவிட்டது. இதற்கு எதிராக கருநாடக விடுதிகள் உரிமையாளர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கில், அம்மாநில உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

இந்நிலையில் கருநாடக அரசின் தலைமை வழக்குரைஞர் சசிகிரண் நீதிபதி எம்.ஜோதி முன்னிலையில் ஆஜராகி எழுத்துப்பூர்வமான வாதத்தை தாக்கல் செய்தார். அப்போது அவர், ‘‘ஜப்பானில் 1947-ஆம் ஆண்டே மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு விடுமுறை அளிக்கும் முறை அமலுக்கு வந்துள்ளது. கருநாடகாவில் இந்த திட்டம் தற்போதுதான் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மகளிரின் நலனை கருத்தில் கொண்டு அரசு மேற் கொண்டுள்ள இந்த கொள்கை முடிவில் தனியார் நிறுவனங்களிடம் அனுமதி கேட்க வேண்டியதில்லை” என்றார்.

‘‘இதனை ஏற்ற நீதிபதி, இவ்வழக்கின் ஆட்சே பணை மனுக்கள் மீது விரிவான விசாரணை நடத்த வேண்டியுள்ளது. எனவே வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் ஜனவரி 20-ஆம் தேதி நடத்தப்படும்” எனக்கூறி வழக்கை ஒத்திவைத்தார். இந்நிலையில் கருநாடக அரசு மாதவிடாய் விடுமுறை திட்டத்தை அம்மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவிகளுக்கும் நீட்டிக்கத் திட்டமிட்டுள்ளது. இதற்காக மாதவிடாய் விடுப்பு கொள்கை சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்ள அரசு முடிவெடுத்துள்ளது. அதன்படி மாதத்துக்கு ஒரு நாள் வீதம் ஆண்டுக்கு 12 நாட்கள் மாணவிகள் மாதவிடாய் விடுமுறை எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *