‘வந்தே மாதரம்’ பாடலைப் பயன்படுத்தி பாகுபாட்டை உருவாக்கினார்கள் தி.மு.க. மக்களவை உறுப்பினர் ஆ.இராசா உரை

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

டில்லி, டிச.10  பிரிவினை குறித்து கூறும் பிரதமர், அது எங்கே உள்ளது? யாரிடம் உள்ளது என்பதை விளக்க வேண்டும் என்று திமுக எம்.பி.ஆ.ராசா தெரிவித்துள்ளார். மக்களவையில் வந்தே மாதரம் பாடலின் 150ஆம் ஆண்டு நிறைவு சிறப்பு விவாதத்தின் மீது பேசிய திமுக மக்களவை உறுப்பினர் ஆ.ராசா,”இந்தியாவில்தான் தேசிய கீதம், தேசிய பாடல் என்று தனித்தனியாக இருக்கின்றன.தேசிய கீதம் நமது நாட்டை ஒருங்கிணைக்கிறது. ‘வந்தே மாதரம்’ நமது சுதந்திரத்தைப் பற்றியது; அதன் தாக்கத்தைப் பற்றியது. ‘வந்தே மாதரம்’ பாடலை பயன்படுத்தி பாகுபாட்டை உருவாக்கினார்கள்.

‘சுதேசி’ போராட்டத்தில் இஸ் லாமியர்கள் கலந்து கொள்ளக் கூடாது என்று தடுக்கப்பட் டார்கள். வகுப்புவாதம் என்பது இஸ்லாமியர்களால் தூண்டப் படவில்லை. பிரிவினை குறித்து கூறும் பிரதமர், அது எங்கே உள்ளது? யாரிடம் உள்ளது என்பதை விளக்க வேண்டும். ‘வந்தே மாதரம்’ பாடல் ஆங்கிலேயர்களுக்கு எதிராக மட்டும் பயன்படுத்தப்படவில்லை. பிரிவுபட்டிருந்த நாட்டை ஒருங் கிணைக்க தேசிய கீதம் தேவைப்பட்டது. வந்தே மாதரத்தை தற்போதைய வடிவில் ஏற்றுக்கொள்ள எதிர்க்கட்சிகள் தயாராக உள்ளோம். வந்தே மாதரத்தை எழுதிய பங்கிம் சந்திர சாட்டர்ஜிக்கு எவ் வாறு அரசியல் ஆக்கப்படும் என தெரிந்திருக்காது,” இவ்வாறு தெரிவித்தார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *