நெல்சன் மண்டேலா நினைவு நாள் இன்று (5.12.2013)

2 Min Read

‘சமூக நீதிக்கான நீண்ட பயணம்’

நெல்சன் ரோலிஹ்லாஹ்லா மண்டேலா அவர்களின் நினைவு நாள் இன்று (5.12.2013).தென்னாப்பிரிக்காவின் நிறவெறி ஆட்சிக்கு எதிராகத் தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த ஒரு மகத்தான தலைவர் நெல்சன் மண்டேலா ஆவார்.

நிறவெறியின் கோரப்பிடி

1948 முதல் 1990 வரை தென்னாப் பிரிக்காவை ஆதிக்கம் செலுத்திய நிறவெறி என்பது, ஒரு கொடூரமான இனப் பாகுபாட்டுச் சட்ட அமைப்பு ஆகும். இந்தச் சட்டங்களின் கீழ், கருப்பின மக்கள் வெள்ளையின மக்களிடமிருந்து பிரிக்கப்பட்டு, கல்வியறிவு, வேலைவாய்ப்பு, நில உடைமை, அரசியல் உரிமைகள் மற்றும் சமூக வசதிகள் என அனைத்து அடிப்படை உரிமைகளிலும் அப்பட்டமாக ஒடுக்கப்பட்டனர். மக்கள்தொகையில் பெரும்பான்மையாக இருந்தும், கருப்பின மக்கள் அடிமையாக்கப்பட்டனர். இந்த அநீதியான அமைப்பை அகற்றவே மண்டேலாவின் போராட்டம் தொடங்கியது.

மண்டேலா ஒரு சட்டக் கல்லூரி மாணவராக இருந்தபோது, ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸில்  இணைந்தார். அதன் இளைஞர் அமைப்பை உருவாக்க முக்கியப் பங்காற்றினார்.

ஆயுதப் போராட்டம்

அமைதி வழிப் போராட்டங்கள் வெள்ளையின ஆட்சியின் மிருகத்தனமான அடக்குமுறைகளால் (உதாரணமாக, 1960-இல் ஷார்ப்வில் படுகொலை) பயனற்றுப் போனபோது, மண்டேலா தனது போராட்ட உத்தியை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

1961 ஆம் ஆண்டில், ஆப்பிரிக்கன் நேஷனல் காங்கிரஸின்    ‘உம்கோன்டோ வி சிஸ்வே’-அய் (‘தேசத்தின்  போர்வாள்’) என்பது  முக்கியமான அமைப்பாகும்.  இது நிறவெறி அரசின் முக்கியமான கட்டமைப்புகளை அழிக்கும் வேலையை மேற்கொண்டது. இது தற்காப்பிற்காகவும், அரசுக்கு அழுத்தம் கொடுக்கவும் மேற்கொள்ளப்பட்ட ஒரு துணிச்சலான நடவடிக்கையாகும்.

1964 ஆம் ஆண்டில், தேசத்துரோகக் குற்றம் சாட்டப்பட்டு மண்டேலா கைது செய்யப்பட்டார். வாழ்நாள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். அப்போது நீதிமன்றத்தில் அவர் ஆற்றிய உரை, சமூக நீதி மற்றும் சுதந்திரத்திற்கான அவரது அசைக்க முடியாத உறுதியைப் பறைசாற்றியது.

தனது 27 ஆண்டுகால சிறைவாசத்தில் பெரும்பகுதியை, ரோபன் தீவில்  உள்ள தனிமைச் சிறையில் மிகக் கடுமையான சூழ்நிலைகளில் கழித்தார். சுண்ணாம்புச் சுரங்கங்களில் கடின உழைப்பு செய்ய வற்புறுத்தப்பட்டார்.

சிறைக்குள்ளிருந்தும் அவர் போராட்டத்தைத் தொடர்ந்தார். அங்குள்ள அரசியல் கைதிகளின் தலைவர் போலச் செயல்பட்டு, அனைத்து இனக் கைதிகளுக்கும் மேம்பட்ட உரிமைகள் மற்றும் சிறை நிலைமைகளுக்காக வாதாடினார். சிறைவாசம் அவரது மன உறுதியைக் குலைக்கவில்லை, மாறாக அவரை சுதந்திரம் மற்றும் சமத்துவத்தின் உலகளாவிய சின்னமாக மாற்றியது.

 பன்னாட்டு அழுத்தம்

உலகெங்கிலும் இருந்து, மண்டேலாவை விடுதலை செய்யக்கோரியும், நிறவெறி ஆட்சியைப் புறக்கணிக்கக் கோரியும் பெரும் போராட்டங்கள் நடந்தன.

1990 ஆம் ஆண்டில், அப்போதைய அதிபர் எஃப். டபிள்யூ. டி கிளார்க் மண்டேலாவை விடுதலை செய்தார். மண்டேலாவும் டி கிளார்க்கும் இணைந்து, பேச்சுவார்த்தை மூலம் நிறவெறி ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தனர்

 நோபல் பரிசு

1993 ஆம் ஆண்டில், நிறவெறியை முடிவுக்குக் கொண்டு வந்தமைக்காக மண்டேலாவும் டி கிளார்க்கும் இணைந்து அமைதிக்கான நோபல் பரிசு பெற்றனர்.

குடியரசுத் தலைவர் ஆன பிறகு, மண்டேலா பழிவாங்கலைத் தவிர்த்து, நல்லிணக்கத்திற்கே முக்கியத்துவம் கொடுத்தார்.

கடந்த காலத்தில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்களை விசாரிப்பதற்காக, அவர் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணையத்தை  நிறுவினார். இது, இன நல்லிணக்கத்தை அடைவதற்குப் பழிவாங்குவதை விட மன்னிப்பு மற்றும் உண்மையைப் பேசுவதே சிறந்தது என்ற அவரது ஆழமான நம்பிக்கையின் வெளிப்பாடாகும்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *