மோடிக்குப் பூ தூவ ரூ.1.60 கோடி விரயம்

1 Min Read

பெங்களூரு,  மே 8- கருநாடக சட்டமன்ற தேர்தலில் 2 நாட்கள் பெங்களூருவில் பிரதமர் மோடி ஊர்வலம் நடத்தி இருந்தார். குறிப்பாக 32 கிலோ மீட்டர் தூரம் அவர் திறந்த காரில் ஊர்வலம் சென்றிருந்தார். அவர் செல்லும் பாதை முழுவதும் இருபுறங்களிலும் பாதுகாப்புக்காக இரும்பு தடுப்புகள் வைத்து அடைக் கப்பட்டு இருந்தது. அதற்கு மேல் காவி துணிகள் கட்டப்பட்டு, கொடிகளாக பறந்தது.

இந்த நிலையில், பிரதமர் மோடியின் 2 நாட்கள் பிரச் சாரத்திற்காக சராசரியாக ரூ.1.60 கோடி செலவாகி இருக்கலாம் என்று பா.ஜனதா பிரமுகர் ஒருவர் தெரிவித்துள்ளார். அதாவது ஒரு கிலோ மீட்டருக்கு இரும்பு தடுப்புகள், கொடிகள், பூக்களுக்கு மட்டும் ரூ.5 லட்சத்திற்கு மேல் செலவானதாகவும், ஒட்டு மொத்த மாக ரூ.1.60 கோடி செலவாகி இருக்கலாம் என்றும் அந்த நபர் தெரிவித்துள்ளார்.

இதை வேட்பாளர்கள் மற்றும் பா.ஜனதா கட்சியின் தேர்தல் செலவாக தேர்தல் ஆணையம் எடுத்துக் கொள்ளலாம், அந்தந்த பகுதியில் இருக்கும் பா.ஜனதா பிரமுகர்களுக்கான செலவாகவே பார்க்கப்படுகிறது. பொதுக்கூட் டங்களில் தன்னை தூரத்திலிருந்து தான் மக்கள் பார்ப்பதாலும், ஊர்வ லத்தின் மீது தன்னை அருகிலிருந்து மக்கள் பார்ப்பார்கள் என்பதால், பிரதமர் மோடியின் ஊர்வலத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்ப தாக அந்த பிரமுகர் தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *