பிரதமர் மோடியின் உண்மையான பட்டப்படிப்பு என்ன? டில்லி உயர்நீதிமன்றம் புதிய ஆணை

2 Min Read

புதுடில்லி, நவ.13- பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு தொடர் பான வழக்கில் டில்லி உயர்நீதி மன்றம் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

 உத்தரவு

பிரதமர் மோடி, டில்லி பல் கலைக்கழகத்துக்கு உட்பட்ட கல்லூரியில் 1978-ஆம் ஆண்டு பி.ஏ. பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றதாக அவரது ஆவணங்களில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

அதற்கான ஆதாரங்களை அளிக்க உத்தரவிடக்கோரி, தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் நீரஜ் என்பவர் மத்திய தகவல் ஆணையத்திடம் விண்ணப்பித்தார். அதை ஏற்று, 1978-ஆம் ஆண்டு தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களின் பதிவேடுகளை வெளியிடுமாறும், அவற்றைபார்க்க மனுதாரரை அனுமதிக்குமாறும் டில்லி பல்கலைக்கழகத்துக்கு கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 21-ஆம் தேதி மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டது.

ரத்து

அந்த உத்தரவை எதிர்த்து, டில்லி பல்கலைக்கழகம் உள்பட 6 பேர் சார்பில் டில்லி உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

அவற்றை விசாரித்த ஒற்றை நீதிபதி, உயர் பதவியில் இருப்ப தாலேயே பிரதமரின் தனிப்பட்ட தகவல்களை எல்லாம் பொது வெளியில் வெளியிட வேண்டும் என்று அவசியம் இல்லை என்று கூறி, கடந்தஆகஸ்டு 25-ஆம் தேதி, மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்தார்.

மேல்முறையீடு

ஒற்றை நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, டில்லி உயர்நீதிமன்ற அமர்வில் நீரஜ், ஆம் ஆத்மி பிரமுகர் சஞ்சய்சிங், வழக்குரைஞர் முகமது இர்ஷாத் ஆகியோர் மேல் முறையீடு செய்தனர். மேல் முறையீடு செய்வதற்கு தாமதம் ஆனதற்கு மன்னிக்குமாறும் கேட்டுக்கொண்டனர்.

இந்நிலையில், இந்த மேல்முறை யீட்டு மனுக்கள், டில்லி உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி தேவேந்திர குமார் உபாத்யாயா, நீதிபதி துஷார் ராவ் கெடலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு (12.11.2025) விசாரணைக்கு வந்தன.

ஒத்திவைப்பு

அப்போது, மேல்முறையீடு செய்ய தாமதம் ஆனதற்கு மன்னிப்பு கோரும் மனுக்களுக்கு 3 வாரங்களுக்குள் ஆட்சேபனையை சமர்ப்பிக்குமாறு டில்லி பல் கலைக்கழகத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

டில்லி பல்கலைக்கழகம் ஆட்சேபனை தாக்கல் செய்த பிறகு, அதற்கு மனுதாரர்கள் 2 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். விசாரணையை ஜனவரி 16-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *