பீகார் சட்டமன்ற தேர்தலுடன் ஏழு மாநிலங்களில் 8 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தலும் நடைபெற்றது

புதுடில்லி, நவ. 12- பீகார் சட்டமன்ற இறுதிக் கட்ட தேர்தலுடன் நேற்று (11.11.2025) 7 மாநிலங்களில் 8 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தலும் நடந்தது.

தெலங்கானா மாநிலம் ஜூபிளி ஹில்ஸ் சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தது. 50 சதவீதத்துக்கு மேற்பட்ட வாக்குகள் பதிவா கின.

ராஜஸ்தான் மாநிலம் பரன் மாவட்டம் அந்தா சட்டமன்ற தொகுதியில்இடைத்தேர்தல் நடந்தது. 80 சதவீத வாக்குகள் பதிவாகின.

ஜார்கண்ட் மாநிலம் காட் ஷிலா சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தது. 74 சதவீத வாக்குகள் பதிவாகின.

காஷ்மீர் யூனியன் பிரதேசம் நக்ரோடா சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 74.63 சதவீத வாக்குகள் பதி வாகின. காஷ்மீரில் பட்கம் சட்டமன்ற தொகுதியிலும் இடைத்தேர்தல் நடந்தது. அங்கு 50 சதவீத வாக்குகள் பதிவாகின.

மிசோரம் மாநிலம் தம்பா சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தது. அங்கு 75.92 சதவீத வாக்குகள் பதிவாகின.

பஞ்சாப் மாநிலம் டர்ன் டரன் சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தது. 60 சதவீத வாக்குகள் பதிவா கன. ஒடிசா மாநிலம் நுவபடா சட்டமன்ற தொகுதி யில்இடைத்தேர்தல் நடந்தது. 75.37 சதவீத வாக்குகள் பதிவாகின.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *