‘வந்தே பாரத்’ ரயில் தொடக்க விழாவில் மாணவிகளை ஆர்.எஸ்.எஸ். பாடலை பாட வைப்பதா? விசாரணை நடத்த கேரள அரசு உத்தரவு

1 Min Read

திருவனந்தபுரம், நவ.10- வந்தே பாரத் ரயில் தொடக்க விழாவில் ஆர். எஸ்.எஸ். பாடலை பாடுவதற்கு மாணவிகளை பயன் படுத்திய விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆர்.எஸ்.எஸ். பாடல்

கேரளாவில் எர்ணாகுளம்-பெங்களூரு இடையே ‘வந்தே பாரத்’ ரயில் சேவை தொடக்க விழாவில் பள்ளி மாணவிகள் விநாயகரை மய்யப்படுத்திய ஆர்.எஸ்.எஸ். பாடலை பாடினர். இந்த விவகாரம் சர்ச்சைக் குள்ளாகி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தெற்கு ரயில்வேக்கு பலரும் கண்டனம் தெரிவித் துள்ளனர்.

கேரள முதலமைச்சர் கண்டனம்

கேரள இதுதொடர்பாக முதலமைச்சர் பினராயி விஜயன் தனது முகநூல் பக்கத்தில் கண்டன அறிக்கையை பதிவிட்டுள்ளார். அதில், எர்ணாகுளம் வந்தே பாரத் தொடக்க விழாவில் பள்ளி மாணவ, மாணவிகளை ஆர்.எஸ்.எஸ். பாடலை பாடவைத்தது கடும் கண்டனத்திற்குரியது. வகுப்புவாத சித்தாந்தத்திற்கும், வெறுப் புணர்ச்சிக்கும் பெயர் பெற்ற ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பாடலை அரசு நிகழ்வில் பயன்படுத்துவது அரசியலமைப்பின் கோட்பாடு களை மீறும் செயலாகும் என தெரிவித்துள்ளார்.

விசாரணைக்கு உத்தரவு

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி விளக்க அறிக்கை சமர்ப்பிக்க பொது கல்வித்துறை இயக்குநருக்கு அமைச்சர் சிவன்குட்டி உத்தர விட்டுள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *