வங்காளத்தில் அதிர்ச்சி தகவல் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்துக்கான படிவம் வழங்கப்படாததால் மகளுடன் தற்கொலைக்கு முயன்ற பெண்

2 Min Read

கொல்கத்தா, நவ.10- மேற்கு வங்காளத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்துக்கான கணக்கீட்டு படிவம் வழங்காததால் பெண் ஒருவர் தனது மகளுடன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தாய் வீட்டில் வசிப்பு

தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் வாக்காளர் நடந்து வருகிறது.

இதற்காகவாக்குச்சாவடி அதிகாரிகள் வீடுதோறும் சென்று கணக்கீட்டு படிவம் வழங்கி விவரங்களை சேகரித்து வருகின்றனர்.

அந்தவகையில் மேற்கு வங்கா ளத்திலும் இந்த பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன. அங்குள்ள ஹூக்ளி மாவட்டத்தின் தனியாகாலி பகுதியில் சமீபத்தில் வாக்குச்சாவடி அதிகாரிகள் இந்த பணிகளை மேற்கொண்டனர்.

அந்த பகுதியை சேர்ந்த 27 வயது இளம்பெண் ஒருவர் தனது கணவருடன் ஏற்பட்ட தகராறை தொடர்ந்து தனது தாய் வீட்டில் கடந்த 6ஆண்டுகளாக வசித்து வருகிறார். தனது மகளையும் அவருடனே வைத்திருந்தார்.

நாடு கடத்துவார்கள் என அச்சம்

அவர்களது வீட்டுக்கு சென்ற வாக்குச்சாவடி அதிகாரிகள், அந்த இளம்பெண்ணுக்கு கணக்கீட்டுப்படிவம் வழங்க வில்லை. அவரைத்தவிர குடும்பத் தினர் அனைவருக்கும் படிவம் வழங்கி விவரங்களை சேகரித்தனர்.

இதனால் அந்த இளம் பெண் தீவிர மன உளைச்சலுக்கு ஆளானார். தன்னையும், தனது மகளையும் தடுப்புக்காவல் மய்யங்களுக்கு மாற்றி விடுவார் களோ? அல்லது நாடு கடத்துவார்களோ? என்று குடும்பத்தினரிடம் கூறியவாறே இருந்தார்.

இவ்வாறு கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்த அவர் நேற்று முன்தினம் (18.11.2025) திடீரென தனது மகளுடன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

அவசர சிகிச்சைப்பிரிவில் சேர்ப்பு

இதில் மயங்கிய அவர்கள் இருவரையும் கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் குடும்பத்தினர் அனுமதித்து உள்ளனர். அங்கு அவசர சிகிச்சைப்பிரிவில் இருவருக்கும் தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவர்கள் இருவரின் உடல் நிலையும் மோசமான நிலையில் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வழக்குப்பதிவு

மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர். வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த விவகாரத்தில் இளம்பெண் ஒருவர் மகளுடன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *