பள்ளிக் குழந்தைகளுக்கு பாடப் புத்தகங்களில் உணவு விநியோகமா? என் இதயமே நொறுங்கி விட்டது! பிஜேபி ஆட்சிக்கு ராகுல்காந்தி கண்டனம்

1 Min Read

புதுடில்லி, நவ.9– காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று (8.11.2025) தனது எக்ஸ் தள பக்கத்தில் பள்ளி குழந்தைகள் உணவருந்தும் காணொலி ஒன்றை பதிவிட்டு கருத்து வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

‘மத்தியப் பிரதேசத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் பாடப் புத்தகங்களை தரை யில் விரித்து அதில் பள்ளி குழந்தைளுக்கு மதிய உணவு பரிமாறப்படும் காணொலிக் காட்சியை கண்டேன். அந்த நேரம் முதல் என் இதயம் உடைந்து நொறுங்கி போய் உள்ளது.

இதுபோன்ற பரிதாபகரமான நிலையில் நாட்டின் எதிர்காலத்தை வளர்ப்பதற்காக நாட்டின் பிரதமரும், முதலமைச்சரும் வெட்கப்பட வேண்டும்.

நாட்டின் எதிர்காலத்தை தாங்கி யிருக்கும் இந்த அப்பாவி குழந்தைகளின் கண்ணியம் காப்பதற்காக அவர்களுக்கு ஒரு தட்டு கூட கிடைக்கவில்லை. 20 ஆண்டுகளுக்கும் மேலான அம்மாநிலத்தை ஆளும் பா.ஜனதா அரசாங்கம் அந்த குழந்தைகளுக்கு சென்று சேர வேண்டிய தட்டுகளைக் கூட திருடி விட்டனர்’.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *