இலங்கை சிறையில் உள்ள 29 காரைக்கால் மீனவர்களுக்குக் காவல் நீட்டிப்பு

1 Min Read

ராமேஸ்வரம், நவ. 9–  இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த 29 மீனவர்களுக்குச் சிறைக் காவலை நீட்டித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நவம்பர் 10 ஆம் தேதி வரை இவர்களுக்குச் சிறைக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 28 மற்றும் அக்டோபர் 9 ஆகிய தேதிகளில், பாக்ஜலசந்தி கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இரு ஆழ்கடல் விசைப்படகுகளுடன் சென்ற 29 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.

நீதிமன்ற வாய்தா நாளான நவம்பர் 7, 2024 அன்று, மீனவர்கள் ஊர் காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி, மீனவர்களுக்கு நவம்பர் 10 வரை சிறைக் காவலை நீட்டித்து உத்தரவிட்டார். இதையடுத்து, மீனவர்கள் மீண்டும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *