தேர்தலைத் திருடி பிரதமரானவர் மோடி: பீகாரில் வாக்குத் திருட்டு நடக்க ஜென் இளைஞர்கள் விடமாட்டார்கள்

1 Min Read

ராகுல் காந்தி திட்டவட்டம்!

பாட்னா, நவ.8 பீகார் சட்டமன்றத் தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 6.11.2025 அன்று  நடைபெற்று முடிந்த நிலையில் அடுத்த கட்ட வாக்குப்பதிவு 11 ஆம் தேதி நடக்கிறது.

இதனை முன்னிட்டு நேற்று (7.11.2025) பீகாரில் பகல்பூரில் நடந்த தேர்தல் பேரணியில் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி  உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், அரி யானாவில் 2 கோடி வாக்காளர்கள் உள்ளனர், வாக்குப் பட்டியலில் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் போலியானவர்கள். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் தேர்தல் ஆணையம் இணைந்து அரியானா தேர்தலைத் திருடிவிட்டனர் என்பதை நான் உங்களுக்கு உறுதியாகச் சொல்கிறேன்.

மக்களவை, மகாராட்டிரா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய இடங்களில் அவர்கள் திருடியதாக நாங்கள் ஆதாரங்க ளுடன் கூறினோம், இப்போது அவர்கள் பீகார் தேர்தலில் திருட்டு மூலம் வெற்றி பெற முயற்சிக்கிறார்கள்.

கடைசி தருணம் வரை எங்களுக்கு வாக்காளர் பட்டியல் கிடைக்கவில்லை. பீகார் ஜென் z இளைஞர்கள் இங்கு வாக்குத் திருட்டு நடக்க விடமாட்டார்கள்.

இந்த வாக்குத் திருட்டு அதானி மற்றும் அம்பானி போன்றவர்களுக்கு உங்கள் நிலத்தை வழங்கவும், உங்கள் மருத்துவமனைகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை தனி யார்மயமாக்கவும் இந்த வாக்கு திருட்டு நடத்தப்படுகிறது.

நிதிஷ் குமார், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பீகார் மக்களை தொழிலாளிகளாக மட்டுமே வைத்துள்ளனர்’’ என்று தெரி வித்தார்.

முன்னதாக நேற்று (7.11.2025) டில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, தேர்தலைத் திருடி பிரதமரானவர் மோடி என்பதை நாட்டின் ஜென் z இளைஞர்களுக்குத் தெளிவாக எடுத்துரைப்போம் என்று தெரிவித்திருந்தார்.

5.11.2025 அன்று அரியானாவில் வாக்கு மோசடி குறித்த தரவுகளை சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் ராகுல் காந்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *