கவிதைத் துளிகள்…

Viduthalai
1 Min Read

“குத்தகைப் பிணி…”

‘காலரா… வாந்தி பேதி…’

‘அம்மைப் பிணி’களை

காலங்காலமாய்…

இம்மண்ணில்…

‘மதமடமை தீரும்வரை…’

தொண்ணூற்று ஒன்பது

ஆண்டு நெடுங்குத்தகை

எடுத்த மெகா தெய்வம்…

‘காளியாயி… மாரியாயி…’!

—-

“இந்து சனாதனத் தீவிரவாதிகள்”

– சிவ ‘லிங்கம்…!’

– விட்ணு ‘லிங்கம்…!’

– பிரம்ம ‘லிங்கம்…!’

– விசுவ ‘லிங்கம்…!’

– சொர்ண ‘லிங்கம்…!’

– கிருட்டிண ‘லிங்கம்…!’

– பூதலிங்கம்….!

– இராம ‘லிங்கம்…!’

– ஆவுடை ‘லிங்கம்…!’

– (எ) மகா ‘லிங்கம்…!’

= வைத்திய ‘லிங்கம்…!’

—-

“வேள்வி….”!

‘கல்வி ஞான’த்தை

முடமாக்கி…

‘கேள்வி ஞான’த்தை

சூனியமாக்க வல்லது…

– ‘வேள்வி…’!

—-

“அருங்குணத்தான்…”!

‘குணம்‘ பெரிதென வாழும்

‘அருங் குணத்தான்’ முன்னர்…

‘குலம்‘ என் செய்யும்…?

‘கோத்திரம்‘ என் செய்யும்…?

‘சாஷ்டாங்க நமஸ்காரம்தான்…’

என் ‘பெரிது செய்துவிடும்…’?

– கவிஞர் தி.பஞ்சநாதன், நாவல்பட்டு

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *