எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்கள்? மோசடி முறைகேடு வழக்கு அனில் அம்பானியின் ரூ. 7,500 கோடி சொத்துக்கள் முடக்கம்! அமலாக்கத்துறை நடவடிக்கை

1 Min Read

புதுடில்லி, நவ.4- ரூ.17 ஆயிரம் கோடி முறைகேடு வழக்கில், அனில் அம்பானிக்கு சொந்தமான ரூ.7,500 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.

கடந்த 2017ஆம் ஆண்டு, பிரபல தொழில் அதிபரும், ரிலையன்ஸ் குழும தலைவருமான அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் பைனான்ஸ் லிமிடெட் நிறுவனமும், ரிலையன்ஸ் கமர்சியல் பைனான்சும் பொதுநிதி திரட்டின.

அதில், யெஸ் வங்கி 2 நிறுவனங்களிலும் சேர்த்து, ரூ.5 ஆயிரம் கோடிக்கு மேல் முதலீடு செய்தது. நாளடைவில் இது வாராக்கடன் ஆனது.

இதுபோல், பொதுநிதியில் நிதி முறைகேடு, கடன்களை வேறு நிறுவனங்களுக்கு திருப்பி விடுதல் என்ற வகையில் ரிலையன்ஸ் குழும நிறுவனங்கள் ரூ.17 ஆயிரம் கோடி அளவுக்கு முறைகேடு செய்ததாக புகார்கள் எழுந்தன.

இதுகுறித்து சி.பி.அய். வழக்குப்பதிவு செய்ததன் அடிப்படையில், அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்தது. கடந்த ஜூலை மாதம், அனில் அம்பானி குழுமத்துக்கு சொந்தமான 50 நிறுவனங்களின் அலுவலகங்களிலும், குழும நிர்வாகிகள் உள்பட 25 பேர்களின் வீடுகளிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

அதைத்தொடர்ந்து, கடந்த ஆகஸ்டு மாதம் அனில் அம்பானியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.

அதன் அடிப்படையில், அனில் அம்பானிக்கு சொந்தமான ரூ.7,500 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்க அமலாக்கத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் 4 இடைக்கால உத்தரவுகளை பிறப்பித்தது.

டில்லியில் மகாராஜா ரஞ்சித் சிங் மார்க்கில் ரிலையன்ஸ் சென்டருக்கு சொந்தமான மனை, டில்லி, நொய்டா, காசியாபாத், மும்பை, புனே, தானே, அய்தராபாத், சென்னை, கிழக்கு கோதாவரி ஆகிய நகரங்களில் உள்ள சொத்துகள் ஆகியவை முடக்கப்பட்ட சொத்துகளில் அடங்கும்.

மும்பை பாலி ஹில் பகுதியில் உள்ள அனில் அம்பானி பங்களாவும் முடக்கப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *