பிரதமரின் ஆலோசகர் கருத்துக்கு உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதி பதிலடி

1 Min Read

புதுடில்லி, நவ.3-  பிரதமர் மோடியின் பொரு ளாதார ஆலோசனைக்குழு உறுப்பினராக இருக்கும் சஞ்சீவ் சன்யால் கடந்த சில நாட்களுக்கு முன்பு,’ இந்தியா வளர்ந்த நாடாக மாறுவதற்கு நீதித்துறைதான் மிகப்பெரிய ஒற்றை தடையாக உள்ளது’ என்றார். இதை உச்ச நீதிமன்ற மேனாள் நீதிபதி அபய் எஸ்.ஓகா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

அவர் கூறியதாவது: இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் நீதித்துறை உத்தரவுகள் குறித்து ஆக்கபூர்வமான விமர்சனங்களை வழங்க உரிமை உண்டு. எந்த நிலையிலும், அந்த உரிமையை நாம் ஆதரிக்க வேண்டும். பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினர் சஞ்சீவ் சன்யால் கற்றறிந்த மனிதர். வளர்ந்த இந்தியாவாக மாறுவதை தடுத்த நீதித்துறை உத்தரவுகளின் உதாரணங்களை அவர் வழங்கியிருக்க வேண்டும். அந்த உத்தரவுகளின் விவரங்களையும் அவர் வழங்கியிருக்க வேண்டும். அவர் அப்படிச் செய்திருந்தால், அவரது விமர்சனம் ஆக்கபூர்வமான விமர்சனமாக மாறியிருக்கும், அது மிகவும் வரவேற்கத்தக்கது. இவ்வாறு அபய் எஸ். ஓகா கூறியுள்ளார்.

உச்ச நீதிமன்ற வழக்குரைஞர் சங்கத்தின் தலைவரும் மூத்த வழக்குரைஞருமான விகாஸ் சிங் கூறுகையில்,’ பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசனைக்குழு உறுப்பினராக இருக்கும் சஞ்சீவ் சன்யாலின் கருத்து பொறுப்பற்றது. மிகவும் மோசமானது. அவரது கருத்தை பார்க்கும் போது நீதிமன்றங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பது பற்றிய புரிதலின்மையைக் காட்டுகின்றன. உயர் நீதிமன்ற விடுமுறைகள் குறித்து கருத்து தெரிவிப்பவர்கள், இந்த உயர் நீதிமன்றங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப் பற்றிய புரிதல் இல்லாதவர்களாகவே உள்ளனர். உயர் நீதிமன்றத்தில் விடுமுறை என்ற கருத்தைப் புரிந்து கொள்ள, ஒரு பரபரப்பான வழக்குரைஞர் அல்லது நீதிபதி சாதாரண நேரங்களில் செய்யும் வேலையை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்’ என்றார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *