பீகார் மாநிலத்தில் அனைத்துத் துறைகளும் சீரழிவு இளைஞர்களின் கனவுகள் நசுக்கப்பட்டு விட்டன!

1 Min Read

ராகுல் காந்தி பகிரங்க குற்றச்சாட்டு

புதுடில்லி, அக்.29- பீகார் இளைஞர்களின் கனவுகளை நிதிஷ்குமார் அரசு நசுக்கிவிட்டது என்று ராகுல்காந்தி குற்றம் சாட்டி உள்ளார்.

இளைஞர்களுடன் உரையாடல்

நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

சில நாள்களுக்கு முன்பு, பீகார் இளை ஞர்களுடன் கல்வி, சுகாதாரம், வேலை வாய்ப்பு ஆகியவை குறித்து உரையாடலில் ஈடுபட்டேன். மேற்கண்ட அனைத்து துறைகளிலும் பீகார் மோசமான நிலையில் இருப்பதற்கு ஒரே ஒரு குற்றவாளி பொறுப்பு என்றால், அது பா.ஜனதா-அய்க்கிய ஜனதாதளம் அரசுதான்.

பீகார் இளைஞர்களுக்கும் இது தெரியும். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக, மோடி-நிதிஷ்குமார் அரசு, பீகார் இளைஞர்களின் கனவுகளை நசுக்கி விட்டது. மாநிலத்தை கைவிட்டு விட்டது. ஒவ்வொரு துறையிலும் மாநிலத்தை கீழ்நிலைக்குத் தள்ளிவிட்டது.

கீழ்நிலையில் பீகார்

உதாரணமாக, 9 மற்றும் 10 ஆம் வகுப்பு களில் படிப்பை பாதியில் நிறுத்துவதை எடுத்துக்கொண்டால், மொத்தம் 29 மாநி லங்களில் பீகார் 27 ஆவது இடத்தில் இருக்கிறது.

மாணவர் சேர்க்கை, பெண்கள் எழுத்த றிவு, வேலை வாய்ப்பு, தொழில் துறை வளர்ச்சி, சிசு மரண விகிதம், காப்பீட்டு திட்டங்கள், வீடுகளில் கழிப்பறை வசதி, தனிநபர் வருமானம் என அனைத்திலும் பீகார் கீழ்நிலையில் இருக்கிறது.

மாற்றத்துக்கான நேரம்

இது, இரட்டை என்ஜின் அரசு, மாநி லத்தை எப்படி பின்னுக்கு இழுத்துச் சென்றுள்ளது என்பதைக் காட்டும் கண்ணாடி. நான் சந்தித்த பீகார் இளைஞர்கள் அறிவுக்கூர்மையானவர்கள். அவர்கள் எங்கு வேண்டுமானாலும் பிரகாசிக்க முடியும். ஆனால், மாநில அரசு, அவர்களுக்கு வாய்ப்பு அளிப்பதற்கு பதிலாக, வேலையில்லா திண்டாட்டத்திலும், கவலையிலும் ஆழ்த்தி விட்டது.

தற்போது, மாற்றத்துக்கான நேரம் வந்து விட்டது. நீதி கிடைக்க மகா கூட்டணிக்கு ஆதரவு அளியுங்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *