கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் தற்கொலை குறித்து உச்ச நீதிமன்ற உத்தரவு

புதுடில்லி, அக். 28- கல்வி நிறுவனங்களில் மாணவர் தற்கொலையை தடுக்க பிறப் பிக்கப்பட்ட வழிகாட்டு நெறி முறைகள் பின்பற்றப்படு கிறதா? என 8 வாரங்களுக்குள் பதி லளிக்குமாறு மாநிலங்கள், யூனி யன் பிரதேச அரசுகளுக்கு உச்சநீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.
ஆந்திராவில் நீட் பயிற்சி மாணவர் திடீர் மரணம் தொடர் பான வழக்கை கடந்த ஜூலை மாதம் விசா ரித்த உச்சநீதிமன்றம் கல்வி நிறுவனங்கள் மற்றும் பயிற்சி மய்யங்களில் மாணவர் தற்கொலை அதிகரித்து வருவது குறித்து கவலை வெளியிட்டது. பின்னர் மாணவர்களின் மன நல பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண் டும் என அறிவுறுத்திய உச்சநீதி மன்றம், அத்துடன் மாணவர் தற்கொலையை தடுக்கும் வகையில் நாடு முழுவதற்குமான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து உத்தரவிட்டது. 15 வகையான வழிகாட்டுதல்களை வெளியிட்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தில் அரசு தகுந்த சட்டம் அல்லது ஒழுங்குமுறை கட்டமைப்பை உருவாக்கும் வரை இந்த வழிகாட்டுதல்கள் அமலில் இருக்கும் என்றும் தெரிவித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *