இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்

புதுடில்லி, அக்.26 ரஷ்யா- உக்ரைன் இடையே கடந்த 3 ஆண்டுகளாக போர் நடந்து வருகிறது. இந்த போரை நிறுத்துவதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் அதில் அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை. இதையடுத்து ரஷ்யாவின் 2 பெரிய எண்ணெய் நிறுவனங்களான ரோஸ்னெப்ட் மற்றும் லூகாயில் மீது டிரம்ப் அதிரடியாக பொருளாதார தடை விதித்துள்ளார். இதனால் அய்ரோப்பிய யூனியன் நாடுகளும் அந்த எண்ணெய் நிறுவனங்கள் மீது தடை விதிக்க முடிவு செய்துள்ளன.

அமெரிக்காவால் தடை விதிக்கப்பட்டுள்ள ரஷ்யவின் அந்த 2 எண்ணெய் நிறுவனங்களும் உலக கச்சா எண்ணெய் வினியோகத்தில் 6 சதவீத பங்கு வகிக்கின்றன. ரஷ்யாவின் 60 சதவீத எண்ணை தேவையை இந்த 2 நிறுவனங்கள்தான் பூர்த்தி செய்து வருகின்றன. ரஷ்யாவின் ரோஸ்னெப்ட், லூகாயில் நிறுவனங்களிடமிருந்து இந்திய தனியார் துறை எண்ணெய் நிறுவனமான ரிலையன்ஸ் மற்றும் நயாரா நிறுவனங்கள் கச்சா எண்ணெய் வாங்கி வருகின்றன. அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்திருப்பதால் ரஷ்ய நிறுவனங்களிடமிருந்து எண்ணை கொள் முதல் செய்யும் திட்டங்களை இந்திய நிறுவனங்கள் மறு பரிசீலனை செய்யத் தொடங்கியுள்ளன.

இதனால் பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலை நேற்று 5.43 சதவீதத் துக்கு மேல் உயர்ந்தது. ரஷ்யாவிடமிருந்து ரிலையன்ஸ் நிறுவனம் நாள்தோறும் 5 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் வாங்குகிறது. இந்த வினியோகம் கடுமையான பாதிப்புக்குள்ளாகும் என்று தெரிகிறது. இதன் காரணமாக இந்தியாவில் பெட் ரோல், டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்தியா வெளிநாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதில் ரஷ்யாவையே அதிகம் சார்ந்துள்ளது. அந்த நாட்டில் இருந்து இந்தியாவுக்கு தேவையான கச்சா எண்ணையில் 35 சதவீதம் இறக்குமதி செய்யப்படுகிறது. ஈராக்கில் இருந்து 20 சதவீதமும், சவுதி அரேபியாவில் இருந்து 15 சதவீதமும், அய்க்கிய அரபு எமிரேட்சில் இருந்து 12 சதவீதமும் கச்சா எண்ணை இறக்குமதி செய்யப்படுகிறது. அமெரிக்காவிடமிருந்து வெறும் 5 சதவீதம் அளவுக்குத்தான் இந்தியா கச்சா எண்ணெய் வாங்குகிறது. இந்த கோபத்தில் தான் ரஷிய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை கொண்டு வந்துள்ளது. இது ரஷ்யா-இந்தியா இரு நாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அதே நேரம், ஒன்றிய அரசுக்கு சொந்தமான சுத்தி கரிப்பு நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்ப ரேஷன் (அய்.ஓ.சி.), பாரத் பெட்ரோலியம் (பி.பி.சி.எல்.), இந்துஸ்தான் பெட் ரோலியம் (எச்.பி.சி.எல்.), மங்களூர் சுத்திகரிப்பு – பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம், எச். பி.சி.எல்.- மிட்டல் எனர்ஜி (எச்.எம்.இ.எல்) நிறுவனங்களும் ரஷ்யாவின் கச்சா எண்ணெய்யை கொள்முதல் செய் கின்றன. ஆனால், அரசுக்கு சொந்தமான சுத்திகரிப்பு நிறுவனங்கள் ரஷ்யாவின் ரோஸ்னெப்ட், லூகாயில் நிறுவனங்களுடன் எந்த ஒப்பந்தத்தையும் கொண்டிருக்கவில்லை

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *