நாட்டிலேயே அதிகபட்சமாக பாஜகவில் 387 எம்.பி., எம்எல்ஏக்கள் வாரிசு உறுப்பினர்கள் : ஆய்வறிக்கை வெளியீடு

டில்லி, அக்.25- நாட்டிலேயே அதிகபட்ச மாக பாஜகவில் 387 நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் வாரிசு உறுப்பினர்களாக பதவியில் உள்ளனர் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் வாரிசு சட்டமன்ற உறுப்பி னர்கள், நாடா ளுமன்ற உறுப்பினர்கள் குறித்த ஆய்வை ஆங்கில பத்தி ரிக்கை நடத்தியது.

இதில் பா.ஜ.க., கூட்டணி கட்சியான தெலங்குதேசம் கட்சியில் மட்டும் 51 பேர் வாரிசு உறுப்பினர்கள் பதவியில் உள்ளனர். அய்க்கிய ஜனதா தளம் கட்சியில் 28 பேர் வாரிசுகள் என்பது தெரியவந்துள்ளது. மற்ற மாநில கட்சிகளில் 30 பேருக்கும் குறைவாக மட்டுமே வாரிசு உறுப்பி னர்கள் உள்ளனர்.

ஒன்றிய அமைச்சரவை யில் வாரிசுகள் 6 பேர் கேபினட் அமைச்சர் களாகவும், 5 பேர் இணை அமைச்சர்களாகவும் உள்ளனர். அதிகபட்சமாக பா.ஜ.க.,வில் 84 குடும் பங்களை சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டு பதவியில் உள்ளனர். நாடு முழுவதும் 5,294 பேர் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ளனர். அதில் 1,174 பேர் வாரிசுகள் என்பது இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. இதில் 854 பேர் சட்டமன்ற உறுப்பினர்கள், 80 பேர் மேலவை உறுப்பினர்கள்,58 பேர் மாநிலங்களவை உறுப்பினர்கள், 182 பேர் மக்களவை உறுப்பினர்கள் என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *