இது மதச் சார்பற்ற நாடா? முஸ்லிம் அரசியல் மிகப் பெரிய அச்சுறுத்தலாம் ‘வெறியைக் கக்கும்’ சாமியார் யோகி ஆதித்யநாத்

1 Min Read

கோரக்பூர், அக்.24 ”நம் நாட்டிற்கு, ‘முஸ்லிம் அரசியல்’ தான் மிகப்பெரிய அச்சுறுத் தல்,” என உத்தர பிரதேச முதல மைச்சர் யோகி ஆதித்யநாத் குற்றஞ் சாட்டியுள்ளார்.

முசுலிம் அரசியல்

ஆர்.எஸ்.எஸ்., எனப்படும் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவகர்கள் சங்கத்தின் நுாற்றாண்டு விழா உத்தரப் பிரதேசத்தின் கோரக்பூரில் நேற்று (23.10.2025) நடந்தது. இதில் பங்கேற்ற முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பேசியதாவது:

முஸ்லிம் அரசியலுக்கு எதிராக நம் முன்னோர்களான சத்ரபதி சிவாஜி, குரு கோவிந்த் சிங், மஹாராணா பிரதாப் மற்றும் மஹாராணா சங்கா ஆகியோர் போர்களில் ஈடுபட்டுள்ளனர்.

இப்போதும் முஸ்லிம் அரசியல் நம் நாட்டை துண்டாடுவதற்கு சதி செய்து வருகிறது. சங்கூர் பாபா வழக்கு இதற்கு சிறந்த உதாரணம். கடந்த ஜூலையில் கைதாவதற்கு முன் வரை, சட்டவிரோத மத மாற்ற நடவடிக்கையில் சங்கூர் பாபா ஈடுபட்டு வந்துள்ளார்.

தேவையா இந்த அவமானம்?

இந்த சங்கூர் பாபா போன் றவர்களின் கூட்டு முயற்சியுடன், இந்த நாட்டை பிளவுப்படுத்த சதி நடந்து வருகிறது. மதமாற் றத்திற்காக சங்கூர் பாபா கோடிக் கணக்கில் பணத்தை வாரி இறைத்து வருகிறார்.

அந்த பணம் எல்லாம் எங்கிருந்து வருகிறது? இவை எல்லாம் வெளிநாட்டில் இருந்து வரவில்லை. நாட்டு மக்களாகிய உங்களிடம் இருந்தே வருகிறது.

ஏதேனும் ஒரு பொருளை வாங்கினால், அதில், ‘ஹலால்’ முத்திரை இருக்கிறதா என சோதித்து பாருங்கள். உத்தரப் பிரதேசத்தில் ஹலால் பொருட் களை தடை செய்து விட்டோம். சொன்னால் நம்ப மாட்டீர்கள். சோப்பு, துணிகள், தீக்குச்சிகளில் கூட ஹலால் முத்திரை குத்தப் படுகிறது.

ஹலால் முத்திரை மூலம், 25,000 கோடி ரூபாய் அளவுக்கு நிதி திரட்டப்படுகிறது. இந்த பணம் அனைத்தும் பயங்கரவாதம், லவ் ஜிஹாத் மற்றும் மத மாற்றத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. எனவே தான் இதற்கு எதிராக மிகப்பெரிய பிரச்சாரத்தை உத்தரப் பிரதேசத் தில் துவக்கியுள்ளோம்.

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *