தமிழ் தேசியர்கள் காக்கும் ஒரே ரகசியம்

இடம்: மணி அம்மையார் அரங்கம்

கருத்தரங்கம்: 2.0

பேசுபவர்: எழுத்தாளர் வே. மதிமாறன்

தலைப்பு: தமிழ் தேசியர்கள் காக்கும் ஒரே ரகசியம்

” நான் எந்த தேர்தலிலும் இதுவரை ஓட்டு போட்டதில்லை. தேர்தலில் ஓட்டு போடுவது வேஸ்ட். வேஸ்ட் ஆன கட்சி ஆட்சிக்கு வருவதற்கு பதிலாக ஓட்டு வேஸ்ட் ஆகி போவதால் ஒன்றும் நஷ்டம் இல்லை என்ற எனது கருத்தை மாற்றி திமுகவை இந்த தேர்தலில் மூர்க்கத்தனமாக பரிந்துரைக்கிறேன், ஆதரிக்கிறேன். திமுக வரவேண்டும் என்பதற்காக நான் ஓட்டு போடுகிறேன். தமிழ்நாட்டில் உள்ள தமிழ்தேசியவாதிகள் கர்நாடகாவில் பிஜேபிக்கு மாற்றாக குமாரசாமி என்ற ஒன்றுக்கும் உதவாத போங்கு வந்தால் பரவாயில்லை என நினைக்கும் போது அவரை விட ஆயிரம் மடங்கு உயர்ந்த, அரசியலில் தொடர்ந்து செயல்பட்டு வரும், மிசா சட்டத்தின் போது சிறை சென்ற இன்றைய முதல்வர் மு க ஸ்டாலின் ஏன் மீண்டும் முதல்வராக வரக்கூடாது?  பிஜேபி அதிமுக போன்ற கூட்டணி கட்சிகள் வந்தால் சமூகம் சூறையாடப்படும். அதற்கு ஒரே மாற்று வழி திமுக ஆட்சிக்கு மீண்டும் வருவதுதான். திமுக எதிர்ப்பாளர்கள் திமுக தனித்தமிழ்நாடு, திராவிட நாடு.. கோரிக்கைகளை கைவிட்டு விட்டது என்று பேசுவார்கள். அதை அறிவிக்காத, நீ ஏற்றுக்கொள்ளாத, நீ கனவு கூட காணாத நீ அதைப்பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது.? காமெடி நடிகர் வடிவேலு ஒரு திரைப்படத்தில் பலசாலி ஒருவனிடம் நாலு பேர் முன்னால் தன்னை அவனை விட பலசாலி என்பது போல் காட்டிக்கொள்ள கையை காலை ஆட்டி மிரட்டி பாவ்லா செய்துவிட்டு வருவது போலத்தான் இந்த தமிழ் தேசியர்கள்”

என்று சுவையாக தோழர் மதிமாறன் பேசியதை முழுமையாக Periyar Vision OTT இல் இன்றே காணுங்கள். வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியை ஆதரியுங்கள்

நன்றி, வணக்கம்.

– ஜெ. கோதண்டபாணி

நாகர்கோவில்

Periyar Vision OTT-இல் காணொலிகளைப் பார்த்து விமர்சனம் எழுதி [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். உங்கள் விமர்சனங்கள் ‘விடுதலை’ நாளிதழிலும், Periyar Vision OTT-இன் சமூக வலைதளப் பக் கங்களிலும் வெளியிடப் படும்.

சமூகநீதிக்கான உலகின் முதல் OTT எனும் பெருமைக்குரிய ‘Periyar Vision OTT’-இல் சந்தா செலுத்தி பகுத்தறிவுச் சிந்தனையூட்டும் அனைத்துக் காணொலிகளையும் விளம்பரமின்றிப் பார்த்து மகிழுங்கள்!

உங்களுக்கான சிறப்புச் சலுகைகளை தெரிந்து கொள்ள periyarvision.com/subscription பக்கத்திற்குச் செல்லுங்கள்!          இணைப்பு :  periyarvision.com

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *