உலகின் மாசுபட்ட நகரங்கள்: முதலிடத்தில் டில்லி காற்று தரக்குறியீடு 350 ஆக உள்ளது

1 Min Read

புதுடில்லி, அக்.22  உலகின் மாசுபட்ட நகரங்கள்  பட்டியலில் டில்லி முதலிடத்தில் உள்ளது.

சுவிஸ் காற்று தர தொழில்நுட்ப நிறுவன மான அய்கியூஏர்-ன் (IQAir) உலக காற்று தர அறிக்கை 2025 தற்போது வெளியாகி உள்ளது. இந்தப் பட்டியலில் நம் நாட்டின் தலைநகரமான டில்லி முதலிடத்தைப் பிடித்துள்ளது. நேற்று (21.10.2025) காலை நிலவரப்படி டில்லியின் காற்று தரக்குறியீடு (ஏகியூஅய்) 350 ஆக உள்ளது.

இதன்மூலம் உலகில் மிகவும் மோசமாக மாசுபட்ட நகரங்கள் பட்டியலில் முதலிடத்தை டில்லி மாநகரம் பிடித்துள்ளது. இந்தியாவில் காற்று மாசுபாடு கடுமையான சுகாதார அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. இதனால், இந்தியர்களின் ஆயுள் காலம் 5.2 ஆண்டுகள் குறைகிறது என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோல் இந்தப் பட்டியலில் மும்பை 5 ஆவது இடத்தையும், கொல்கத்தா 8 ஆவது இடத்தையும் பிடித்துள்ளன. இந்தப் பட்டியலில் பாகிஸ்தானின் லாகூர் 2 ஆவது இடத்தையும், கராச்சி 4 ஆவது இடத்தையும் பெற்றுள்ளன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *