பா.ஜ.க.வுக்குக் கிடைக்கும் வாக்குகள் கேரளாவை அழித்துவிடும்! கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் எச்சரிக்கை

1 Min Read

கண்ணூர், அக்.22 பாஜகவுக்கு கிடைக்கும் வாக்குகள் கேரளாவின் பிம்பத்தை அழித்து விடும் என்று அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கண்ணூர் மாவட்டக்குழு அலுவலகத்திற்காக புதிதாக கட்டப்பட்ட அழிக்கோடான் நினைவு கட்டடத்தைத் திறந்து வைத்து அவர் மேலும் பேசுகையில், “கேரளா பொதுவாக அனை வரும் சகோதரத்துவத்துடன் வாழும் ஒரு மாநிலம். மறுமலர்ச்சி இயக்கங்களின் முறையான தொடர்ச்சி இருந்ததால், இது சாத்தியமானது. அதனால்தான் கேரளா மற்ற மாநிலங்களைப் போலல்லாமல் ஒரு முன்மாதிரியாக மாறியுள்ளது. சங் பரிவார் இதைச் சீர்குலைக்கும் வகையில் அதன் செயல்திட்டத்தை அமைத்துள்ளது.

ஓணத்திற்குப் பின்னால் உள்ள புரா ணத்தைக் கூட சங் பரிவார் மாற்றுகிறது. மாவலிக்குப் பதிலாக வாமனரை வணங்கு கிறார்கள். சபரிமலையில் புராணத்துடன் தொடர்பில்லாத ஒன்றை அறிமுகப்படுத்த அவர்கள் முயற்சிக்கின்றனர். சங் பரிவார் வெறுப்பைப் பரப்பப் பொய்களை ஆயுதமாகப் பயன்படுத்துகிறது. அவர்களுக்குக் கிடைக்கும் வரவேற்பு இன்று கேரளாவில் நிலவும் சகோதரத்துவத்தையும், அமைதியையும் அழித்துவிடும்.

வாவர் ஒரு பயங்கரவாதி என்ற கருத்தை அவர்கள் புனைந்து பரப்பினர். பாஜகவுக்கு வரவேற்பு கிடைத்தால், இன்று நாம் காணும் அய்யப்பன் கூட மறைந்துவிடும் என்பதை இது நிரூபிக்கிறது. பாஜக தங்கள் செயல் திட்டத்தைத் தெளிவாக அறிவித்துள்ள சூழ்நிலையில், சமூகம் இதை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும். சிபிஎம் எப்போதும் சங் பரிவாரங்களுக்கு வெளிப்படையாக தனது எதிர்ப்பைக் காட்டியுள்ளது” என்று அவர் உரையாற்றினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *